சினிமா

மாற்றுத்திறனாளியை தள்ளிவிட்ட பாதுகாவலர் – கண்டுகொள்ளாமல் சென்ற நாகர்ஜுனா – கடும் எதிர்ப்பால் பகிரங்க மன்னிப்பு!

நடிகர் நாகர்ஜுனாவின் பாதுகாவலர்களால் கீழே தள்ளி விடப்பட்ட மாற்றுத் திறனாளி…சமூக வலைதளத்தில் எழுந்த கடும் கொந்தளிப்பு…ரசிகர்களை திருப்தி படுத்த, மாற்றுத்திறனாளியை நேரில் சந்தித்த நாகர்ஜுனா…தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, நடிகர் தனுஷ் உள்ளிட்டோர் படப்பிடிப்பிற்காக மும்பை சென்றனர். அப்போது, நாகர்ஜுனாவை நெருங்கி வந்த ஒரு மாற்றுத்திறனாளி ரசிகரை, பாதுகாவலர் ஒருவர் அகற்ற முயன்றார். அப்போது, அந்த மாற்றுத் திறனாளி, தடுமாறி, கீழே விழ முயன்றார். இந்தக் காட்சிகளை கவனிக்காமல் சென்றார் நாகர்ஜுனா. நடிகர் தனுஷ் இந்த காட்சிகளை பார்த்தும் கூட, கண்டுகொள்ளாமல் சென்றார். இது சமூக வலைதளத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

சினிமா பிரபலங்கள் பலரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் தனது டுவிட்டர் தளத்தில் இந்தச் செயல்பாட்டிற்கு பகிரங்க மன்னிப்பு கோரினார் நாகர்ஜுனா. எதிர்காலத்தில் இப்படி ஒரு சம்பவம் நடைபெறாமல் பார்த்துக் கொள்வேன் என உறுதி அளித்தார்.தொடர்ந்து, அதே மாற்றுத் திறனாளி ரசிகரை மீண்டும் அதே விமானநிலையத்தில் சந்தித்த நாகர்ஜுனா, அவரை தட்டிக் கொடுத்து, ஆறுதல் சொன்னதுடன், உங்கள் மீது எந்தத் தவறும் இல்லை என கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.

இதனை நாகர்ஜுனா ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். அதே நேரம் பிற ரசிகர்களோ, நாகர்ஜுனா வின் உடல் மொழியை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், தனது பாதுகாவலர்கள் தவறு செய்த நிலையில், அதற்காக அவர் அந்த மாற்றுத்திறனாளியிடம் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.நடிகர்கள் பணம் பெற்றுக் கொண்டு, அவர்களின் தொழிலை மட்டுமே செய்கின்றனர் என்கின்ற புரிதல் இல்லாமல், அவர்கள் மீதும் பைத்தியமாக இருப்பதும், அவர்களை தலைவர்களாக, வழிகாட்டிகளாக ஆக்கிக் கொள்வதும், ரசிகர்களின் தவறு தானே ஒழிய, நடிகர்கள் மீது புகார் சொல்ல முடியாது.காரணம் பல நடிகர்கள், மக்களின் முட்டாள்தனங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், பயனடைவதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button