உலகம்

பாலஸ்தீன் முன்னாள் பிரதமர், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் குடும்ப உறுப்பினர்கள் 10 பேரை கொன்ற இஸ்ரேல்!

பாலஸ்தீன முன்னாள் பிரதமரும், அந்நாட்டு விடுதலை இயக்கமான ஹமாசின் அரசியல் தலைமைக்குழு தலைவருமான இஸ்மாயில் ஹனியேவின் உறவினர்கள் தங்கிருந்த வீடு, அவர்கள் சென்ற கார் உள்ளிட்டவற்றை குறிவைத்து, இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகள் குண்டு மழை பொழிந்தன. இதில் இஸ்மாயில் ஹனியேவின் 80 வயது சகோதரரி மற்றும் அவரது மகன், மருமகள், 7 பேரக்குழந்தைகள் உட்பட 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே இஸ்மாயில் ஹனியேவின் 3 மகன்கள், பேரன்கள், பேத்தி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோரை இஸ்ரேல் பல சந்தர்ப்பங்களில் குறிவைத்து கொலை செய்துள்ளது.அதனைத் தொடர்ந்து தற்போது, இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது.தற்போது இஸ்ரேலில் உள்ள அஸ்கலான் என்ற பகுதி தான், இஸ்மாயில் ஹனியேவின் குடும்பத்தினரின் பாரம்பரிய நிலப்பகுதி ஆகும்.

1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் என்ற தனி நாடு உருவாக்கப்பட்ட போது, அஸ்கலானில் இருந்த இஸ்மாயில் ஹனியேவின் முன்னோர்கள், தங்களது நிலங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.இஸ்மாயில் ஹனியேவின் பெற்றோர், அல் ஷாட்டி அகதிகள் முகாமில் தஞ்சம் அடைந்தனர். அங்கு பிறந்தவர் தான் இஸ்மாயில் ஹனியே. கல்லூரி நாட்களில் ஹமாஸ் அமைப்பில் இணைந்த அவர், பல சந்தர்ப்பங்களில் இஸ்ரேலால் கைது செய்யப்பட்டு, சுமார் 4 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பில் படிப்படியாக பதவி உயர்வு பெற்று, 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற பாலஸ்தீன் பொதுத் தேர்தலில், ஹமாஸ் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியபோது, அந்நாட்டின் பிரதமராக பதவி ஏற்றார். தற்போது அந்த அமைப்பின் பொலிட் பீரோ தலைவராக உள்ளார்.தறபோது, கத்தார் நாட்டில் அரசியல் புகழிடம் அடைந்துள்ள இஸ்மாயில் ஹனியே, இஸ்ரேலுடன் பேச்சு வார்த்தை நடத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.கடந்த 9 மாதங்களாக நிராயுதபாணிகளான காசா மக்கள் மீது இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகள் நடத்தி வரும் கொடூரத் தாக்குதல்களில் இதுவரை சுமார் 38 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button