இந்திய நாடாளுமன்றத்தில் “ஜெய் பாலஸ்தீன்” சிங்கமாய் கர்ஜித்த அசதுதீன் ஓவைசி!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சியின் போது, நடைபெற்ற ஒரு சம்பவம் ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.ஐதராபாத் தொகுதியில் பாஜகவை வீழ்த்தி 5வது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவர் அசதுதீன் ஓவைசி, பதவி ஏற்றுக் கொண்டார்.
அப்போது அவர், “விரட்டியடிக்கப்பட்ட சைத்தானின் தீங்கை விட்டு பாதுகாப்பு தேடியவனாக அல்லாஹ்வின் திருப்பெயரால் பதவி ஏற்றுக் கொள்கிறேன்,” எனத் தொடங்கி, “ஜெய் பீம், ஜெய் மீம், ஜெய் தெலங்கானா, ஜெய் பாலஸ்தீன்” என தனது உரையை முடித்துக் கொண்டார்.
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் 9வது மாதத்தை எட்டியுள்ள நிலையில், உலகம் முழுவதும் ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய படைகளை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் ஆரம்பம் முதலே, மோடி தலைமையிலான பாஜக அரசு, இஸ்ரேல் மீது மென்மையான அணுகுமுறையை கடைபிடித்து வந்தது.
இந்நிலையில் மோடிக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா,பாலஸ்தீனியர்களை மீண்டும் ஆதரிக்கும் வாய்ப்பு எழுந்துள்ளது.அதன் தொடக்க சமிக்கையாக, இன்று நாடாளுமன்றத்தில் ஐதராபாத் எம்.பி., அசதுதீன் எம்.பி.
பாலஸ்தீனியர்களின் அழுகுரலை பதிவு செய்துள்ளார். இது பிற எம்.பி.க்களுக்கும் நினைவூட்டலாக அமைந்துள்ளது.இந்த நிலையில், இதனை கடுமையாக பாஜக விமர்சித்துள்ளது. அதே நேரம் வழக்கமான இதுபோன்ற சந்தர்ப்பங்களில் எதிர்கட்சி உறுப்பினர்களை பேச விடாமல் செய்து, அமளி எழுப்பும் பாஜக எம்.பி.க்கள், இந்த முறை தங்களுக்கு பெரும்பான்மை இல்லை என்பதால், செய்வதறியாமல் அமைதி காத்தது குறிப்பிடத்தக்கது.