ஆள் இல்லா விமானங்களை தடுக்கத் தவறிய இஸ்ரேலின் ஐயன் டோம்கள் – ஹிஸ்புல்லாவிற்கு கிடைத்த வெற்றி!

ஹிஸ்புல்லா தளபதி கொலையால் உச்சக்கட்ட போர் பதற்றம்…
இஸ்ரேலின் வடக்குப் பகுதியை தீக்கிரையாக்கிய ஹிஸ்புல்லா…
ஆள் இல்லா விமானங்களை தடுக்க முடியாமல் திணறும் இஸ்ரேலின் ஐயன் டோம்…
லெபானனின் விடுதலை அமைப்பான ஹிஸ்புல்லாவின் கமாண்டர் Ayman Ghotmeh என்பவர் கடந்த சனிக்கிழமை இஸ்ரேலின் வான் வழித் தாக்குதலால் கொல்லப்பட்டார்.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலின் வடக்கு பகுதியை குறிவைத்து, ஞாயிற்றுக்கிழமை ஹிஸ்புல்லா பல்வேறு அதிரடித் தாக்குதல்களை நடத்தியது.
லெபானானின் அல்மாயதீன் தொலைக்காட்சி, ஹிஸ்புல்லாவின் ராணுவ நடவடிக்கைகளை பட்டியலிட்டுள்ளது. அதன் அடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை, இஸ்ரேலின் Beit Hillel பகுதியில் உள்ள ராணுவத் தலைமையகம் நோக்கி, வெடி மருந்துகள் நிரப்பப்பட்ட ஆள் இல்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ராணுவ மையங்கள் தீக்கிரையாகின. இதில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம், அல்லது காயம் அடைந்திருக்கலாம் என ஹிஸ்புல்லா ராணுவ ஊடகம் தெரிவித்துள்ளது.
இரண்டாவதாக Ayelet HaShahar என்ற பகுதியில் இஸ்ரேல் புதிதாக நிறுவியுள்ள 91வது படைப்பிரிவு தலைமை அலுவலகத்தை குறிவைத்து, ஹிஸ்புல்லா, வெடி மருந்துகள் நிரப்பப்பட்ட ஆள் இல்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம், அல்லது காயம் அடைந்திருக்கலாம் என ஹிஸ்புல்லா ராணுவ ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் ஒரு இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படை வீரர் படுகாயம் அடைந்திருப்பதாக, அந்நாட்டு ஊடகமான டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் உறுதி செய்துள்ளது.3வதாக al-Ramtha என்ற லெபனானிடம் இருந்து இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்துள்ள பகுதி மீது ஹிஸ்புல்லா ராக்கெட் தாக்குதல் நடத்தியது. தங்களது ஆயுதம் இலக்கை சரியாக தாக்கியதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.
4வதாக லெபனானிடம் இருந்து இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்துள்ள al-Semmaqa என்ற பகுதி மீது ஹிஸ்புல்லா ஆர்ட்டிலரி ராக்கெட் தாக்குதல் நடத்தியது. தங்களது ஆயுதம் இலக்கை சரியாக தாக்கியதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.
5வதாக லெபனானிடம் இருந்து இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்துள்ள Shebaa Farms என்ற பகுதி மீது ஹிஸ்புல்லா rocket artillery ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. தங்களது ஆயுதம் இலக்கை சரியாக தாக்கியதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.
ஹிஸ்புல்லாவின் சில வான் வழி தாக்குதல்களை மட்டுமே இஸ்ரேல் முறியடித்துள்ளது. சில தாக்குதல்களை முறியடிக்க இஸ்ரேலின் ஐயன் டோம் தவறியுள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேலியர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
=====