கழுகுகள் மறுஜென்மம் எடுப்பது உண்மையா? சமூக வலைதளங்களில் பரவும் செய்தியின் உண்மைத் தன்மை என்ன?

சமூக வலைதளங்களில் பல ஆண்டுகளாவே பரவி வரும் செய்தி, கழுகுகள் மறு ஜென்மம் எடுப்பதாகவும், தன்னம்பிக்கைக்கு உதாரணமாக கழுகுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த செய்தி என்ன என்பதை முழுமையாக பார்க்கலாம்.
“ஒரு கழுகு 40வது வயதில் வேட்டையாட முடியாமல் முதுமையடையும். அதன் அலகுகள் இறையை கொத்த முடியாமல் வளைந்து விடும். அதன் நகங்கள் கூர்மை இழந்து விடும். அதன் இறகுகள் எடைகூடி, பறக்க முடியாமல் ஆகி விடும். அந்த கழுகு மலை உச்சிக்கு சென்று, மலை இடுக்கில் தஞ்சமடையும். அங்கிருந்தவாறு, அது தன்னை புதுப்பித்துக் கொள்ளும்.
அதன் அலகை பாறையில் மோதி உடைத்துக் கொள்ளும். இதனால் கடுமையான வேதனை ஏற்படும். பிறகு, நகங்களை பெயர்த்து எடுத்து விடும். அதற்கு பிறகு பாறையில் உரசி, அதன் இறகுகளை பிய்த்து எடுத்து விடும். இந்த செயல்பாடுகள் 5 மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெறும்.
இந்த காலத்தில் கழுகு எதையும் சாப்பிட முடியாமல் மரண வேதனையை அனுபவிக்கும். அதற்கு பிறகு, அந்த கழுகிற்கு புதிய அலகுகள் உருவாகும். புதிய இறக்கைகள் முளைக்கும். புதிய நகங்கள் முளைக்கும். அந்த கழுகு மறு பிறகு எடுக்கும். அதற்கு பிறகு மேலும் 30 ஆண்டுகள் கழுகு உயிர்வாழும்.”
இப்படி தகவல் பல ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. ஆனால் இதில் உண்மையில்லை. கழுகின் சராசரி வாழ்நாள் 20 ஆண்டுகள். அதிகபட்ச வாழ்நாள் 38 ஆண்டுகள் ஒரு கழுகு வாழ்ந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. 70 ஆண்டுகள் கழுகு வாழ்ந்ததாக எந்த ஆதாராமும் இல்லை.
மேலும் 5 மாதங்கள் இறை உண்ணாமல் இருந்தால் அவை இறந்து விடும். மேலும் அதன் அலகுகள் ஒரு முறை உடைந்து விட்டால், மீண்டும் முளைக்காது. எனவே இது ஒரு தவறான தகவல்தான்.
=====