உலகம்

அதிரடி உத்தரவு பிறப்பித்து இஸ்ரேலின் கொட்டத்தை அடக்கிய இந்திய நீதிபதி!

அதிரடி உத்தரவு பிறப்பித்து இஸ்ரேலின் கொட்டத்தை அடக்கிய இந்திய நீதிபதி!

நிராயுதபாணிகளான காசா மக்கள் மீது கடந்த 7 மாதங்களாக மனிதத் தன்மையற்ற தாக்குதல்களை நடத்தி வருகிறது இஸ்ரேல். அப்பாவி பாலஸ்தீனியர்கள் மீதான இனப்படுகொலையை உடனே நிறுத்துமாறு, சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக தென்ஆப்ரிக்கா வழக்கு தொடர்ந்துள்ளது.இந்த நிலையில் இஸ்ரேல் தலைவர்கள் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்டவர்களுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கும் நடவடிக்கைகளில் சர்வதேச நீதிமன்றம் இறங்கியுள்ளது. இதனையொட்டி, வெள்ளிக்கிழமை பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ரபா மீதான தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை வழங்கிய நீதிபதிகள் குழுவில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி தல்வீர் பண்டாரியும் ஒருவர். இவருக்கு இந்திய சிவில் சமூகம் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறது.ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை பூர்வீகமாக கொண்ட தல்வீர் பண்டாரி, பத்மபூஷன் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவர்.பல முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில், வழக்கறிஞராக பணியாற்றியவர், உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து, பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியவர். மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர்.

இந்நிலையில் சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிரான வழக்கை 15 நீதிபதிகள் அடங்கிய குழு விசாரித்தது. இறுதியாக, இஸ்ரேலின் செயல்பாடுகள் போர்க்குற்றமாக கருதப்படுவதற்கு உகந்தவை என்றும், ரபா நகர மக்கள் மீது எந்த தாக்குதலில் இஸ்ரேல் ஈடுபடக் கூடாது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு 13 நீதிபதிகளின் ஒருமித்த கருத்துடன் வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை இஸ்ரேல் முன்னாள் நீதிபதியும், உகாண்டா நீதிபதியும் எதிர்த்தனர். எனினும் 13க்கு 2 என்ற அடிப்படையில் இஸ்ரேலுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.எனினும் சர்வதேச கிரிமினல் நீதிமன்ற வரையறைக்குள் தங்கள் நாடு வராது என்றும், இதனால் இந்த உத்தரவு தங்களை கட்டுப்படுத்தாது என இஸ்ரேல் கூறி வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button