கூல் சுரேசுக்கு கார் பரிசு? பெயரை கெடுத்துக் கொண்ட சேலம் ஆர்ஆர் பிரியாணி உரிமையாளர்!

நடிகர் கூல் சுரேஷ் தான் நடித்த படங்கள் மூலமாக பிரபலம் அடையாவிட்டாலும், புதுப் படங்களின் ஓபனிங் ஷோவிற்கு சென்றுவிட்டு, ஊடகங்கள் முன், கத்தி கதறி, விளம்பரம் தேதி, பிரபலம் ஆனவர்….இளைஞர்களுக்கு முன்மாதிரியாக பல ஆளுமைகள் இருந்தாலும், இன்றைய இளைஞர்களோ, இது மாதிரியான ஆட்களுக்கு விசில் அடித்து, பிரபலம் ஆக்கிவிடுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் நிலவி வருகிறது.இந்த சூழலில் தனது உழைப்பின் மூலம் உயர்ந்து, இன்று சமூக அந்தஸ்துடன் வலம் வரும் சேலம் ஆர்ஆர் பிரியாணி உரிமையாளர், கூல் சுரேசுக்கு கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.
இது நெட்டிசன்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.உங்களுக்கு என்ன பைத்தியமா, கூல் சுரேஷ் பெரிய தியாகியா, ஒரு பிரியாணி போட்டு முடிச்சிருக்கலாம். உழைப்பால் உயர்ந்ததால், உங்களை பெரிய ஆளுமை என்று நினைத்தேன், இப்போது தெரிந்து விட்டது, போன்ற பல நெகடிவ் கருத்துக்களை நெட்டிசன்கள் அள்ளிவிட்டு வருகின்றனர்.மேலோட்டமாக பார்க்கும் போது, மக்களுக்காக தங்கள் வாழ்க்கையையே அர்பணித்த எத்தனையோ சமூக போராளிகள், காவல்நிலையம், நீதிமன்றம் என அழைந்து திரிந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், இதுபோன்று இளைஞர்களை வழிகெடுக்கும் நபர்களுக்கு, இப்படி ஒரு அங்கீகாரம் தேவையா போன்ற பல கருத்துக்களை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.
சிலரோ உங்கள் காசு நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் போன்ற கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
தனது தன்னம்பிக்கை மிகுந்த, வெகுளித்தனமான பேச்சுக்கள் மூலம் பிரபலம் அடைந்த சேலம் ஆர்ஆர் பிரியாணி உரிமையாளர் முதன்முறையாக நெட்டிசன்கள் மத்தியில் தலைகுனிவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.