அரசியல்

திமிராக பேசிய கங்கனா – கன்னத்தை பழுக்க வைத்த காண்ஸ்டபிள்! நடந்தது என்ன?

திமிர்த்தனமாக பேசிய நடிகை கங்கனா ரனாவத்…கன்னத்தில் பளார் விட்ட பெண் காவலர்…விமான நிலையத்தில் அமளி துமளி…முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது பழமொழி, அதைப் போல, சமூக வலைதளத்தில் வாய்க்கு வந்த படி கருத்துக்களை பதிவிட்ட, நடிகை கங்கனா ரனாவத்தின் கன்னத்தை பழுக்க வைத்திருக்கிறார் ஒரு காவலர்.
பாஜக ஆதரவாளராக இருந்த கங்கனா ரனாவத் சில ஆண்டுகளுக்கு முன்பு, டெல்லியில் தங்களது வாழ்வாதரத்திற்காக போராடிய விவசாயிகளை தீவிரவாதிகள் என்று அழைத்தார். இது தொடர்பாக அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.மேலும் அங்கு கூடிய பெண்கள் வெறும் 100 ரூபாய்க்காக அங்கு வருவதாக திமிர்த்தனமாக கருத்தை வெளியிட்டார். பிறகு அந்த கருத்தை நீக்கினார்.

இந்த கருத்து விவசாயிகளை புண்படுத்தி இருந்தது. இந்த நிலையில், சண்டிகர் விமான நிலையத்துக்கு வந்த கங்கனா ரனாவத்தை, ஒரு மத்திய தொழிற்படை காவலர் திடீரென கன்னத்தில் பளார் என அறைந்துள்ளார்.அதிர்ச்சியடைந்த கங்கனாவை, சரமாரியாக கேள்விகளால் துளைத்தெடுத்துள்ளார்.இதனையடுத்து அந்த பெண் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த கங்கனா, பஞ்சாபில் தீவிரவாதம் அதிகரித்து விட்டது என மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார்.

இதனிடையே கங்கனாவை தாக்கிய காவலர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் என்றும், அவரது தாயார் அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட நிலையில், கங்கனா 100 ரூபாய் வாங்கிக் கொண்டு பெண்கள் அதில் கலந்து கொள்வதாக அவதூறு குற்றச்சாட்டு சுமத்தியதால், அவரை தாக்கியதாக அந்த பெண் காவலர் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button