அரசியல்

தவறான கருத்துக்கணிப்பு வெளியிட்டதற்காக காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன் – கதறி அழும் பிரசாத் கிஷோர்!

தேர்தல் கணிப்புகளை துல்லியமாக யூகிப்பவர் என்ற நம்பிக்கையை இழந்த பிரசாத் கிஷோர்…பாஜகவிற்கு இல்லாத கூடுதல் 20 சதவீத ஆதரவை அள்ளித்தந்து அம்பலம்…இனி ஒரு போதும், வெற்றி இடங்கள் பற்றிய எண்ணிக்கை பற்றி பேசமாட்டேன் என திட்டவட்டம்…ஒவ்வொரு தேர்தலின்போதும், அரசியல் கட்சிகளை வெற்றியடையச் செய்வதற்காக, அவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு, அவர்களை பிரமோட் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருபவர் பிரசாத் கிஷோர்.ஒரு தேர்தலில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பது, சாதாரண மக்கள் கூட ஒரளவு யூகித்து விடுவார்கள். அந்த வகையில், ஜெயிக்கப் போகின்றவர்களுடன் சேர்ந்து கொண்டு, நூற்றுக்கணக்கான கோடிகளை கட்டணமாக பெற்றுக் கொண்டு அவர்களுக்காக வேலை செய்பவர் பிரசாத் கிஷோர்.

அரசியல்வானில் நரேந்திரமோடி தொடர் வெற்றிகளை குவித்து வந்தது போல், பிரசாத் கிஷோரும் தனது தொழிலில் வீழ்த்த முடியாமல் கொடி கட்டிப் பறந்து வந்தார்.இந்நிலையில் ஒரே நேரத்தில் இருவரின் பிம்பங்களும் தகர்ந்துள்ளது. பாஜக இந்த முறை தனித்து 300 இடங்களிலும், அதன் கூட்டணி 400 இடங்கள் வரை வெல்லும் என போலியான தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளை ஆங்கில தேசிய ஊடகங்கள் வெளியிட்டன.இதனை ஆதரித்த பிரசாத் கிஷோர், பாஜக தனித்து 300 இடங்களில் வெல்லும் என்றார். கணிப்புகள் தவறானவை என்றும் பாஜக 250 இடங்கள் வரை மட்டுமே வெல்லும் என்றும் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்புள்ளதாக பிரபல தேர்தல் ஆய்வாளர் யோகேந்திர யாதவ் அப்போதே துல்லியமாக தெரிவித்தார்.

ஆனால், தனது கருத்து மிகச் சரியானது என்றும், தேர்தல் முடிவு வரும் போது, கையில் தண்ணீர் பாட்டில் உடன் அமர்ந்து கொள்ளுங்கள், காரணம், நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியது வரும் என எதிர்கருத்து சொல்பவர்களை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார் பிரசாத் கிஷோர்.இந்நிலையில், பிரசாந்தின் கணிப்புகள் பொய்யானதால், கடந்த சில நாட்களாக, வெளி உலகத்திற்கு வராமல் இருந்தார்.தற்போது, இந்தியா டுடே ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தனது கணிப்புகள் தவறாக போய் உள்ளதற்கு, காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது கணிப்பு 20 சதவீதம் பொய்யாக போய் உள்ளதை ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் இனி மேல் எந்த கட்சி, எத்தனை தொகுதிகளில் வெல்லும் என ஒருபோதும் முன்கூட்டியே சொல்ல மாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.கடந்த மேற்குவங்காளத் தேர்தலின்போதும், தற்போதைய மக்களவைத் தேர்தலின்போதும் மட்டுமே எண்ணிக்கைகளை குறிப்பிட்டதாகவும், இனி ஒருபோதும் அப்படி செய்ய மாட்டேன் என கதறியுள்ளார்.இவரது தவறான கணிப்புகள் அம்பலமாகியுள்ளதால், இனி அரசியல் கட்சிகள் இவரை நம்புமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button