முதல் சம்பளம் ரூ. 1 கோடி, அப்படியே ஏழைகளுக்கு வழங்கிய மகேஷ் பாபுவின் மகள்!

விளம்பர படத்தில் நடித்து, முதல் சம்பளமாக ரூ.1 கோடி பெற்ற சித்தாரா…ஏழைகளுக்கு நன்கொடை வழங்கி பெருமை…தந்தை மகேஷ்பாபுவின் பெயரை காப்பாற்றிய 12 வயது மகள்…100 கோடி சம்பளம் வாங்கும் பிரபல சூப்பர் ஸ்டார்கள் கூட, ஏழைகளுக்கு உதவுவதில் கஞ்சத் தனமாக நடந்து கொள்ளும் சூழலில், தெலுகு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா, தனது முதல் சம்பளமான 1 கோடி ரூபாயை, ஏழை மக்களின் நலனுக்காக நன்கொடையாக வழங்கியுள்ளார்.
தெலுகு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு சென்னை லயோலா கல்லூரியில் படித்தவர். இவரது மனைவி நடிகை நர்மதா சிரோத்கர். இந்த தம்பதியின் இளைய மகள் சித்தாரா. மூத்த மகன் கவுதம்.தந்தையின் செல்ல மகளான நர்மதா ஐதராபாத்தில் படித்து வருகிறார். இண்ஸ்டகிராமில் மிகவும் பிரபலமான இவர் ஒரு முறை சைபர் குற்றவாளிகளின் தாக்குதலுக்கும் ஆளானவர்.இந்நிலையில் ஒரு நகைக் கடை விளம்பரத்தில் நடித்ததற்காக இவருக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த முதல் சம்பளத்தை, முழுவதுமாக ஏழை, எளிய மக்களின் கல்வி, மருத்துவ தேவைகளுக்கு, அவர் நன்கொடையாக வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.இதன்மூலம் ரசிகர்களின் கூடுதல் ஆதரவையும், பாராட்டுதல்களையும் அவர் பெற்றுள்ளார். அவரை இவ்வாறு வளர்த்தெடுத்த, அவரது தாய் தந்தையையும், மக்கள் பாராட்டி வருகின்றனர்.