ஈ நாடு, ராமோஜி ராவ் பிலிம் சிட்டி, நிறுவனர் ராமோஜி ராவ் மரணம்!

ஆந்திராவின் மாபெரும் ஆளுமை ராமோஜி ராவ் மரணம்…கண்ணீரில் தெலுங்கு திரையுலகம்…10க்கும் மேற்பட்ட மொழிகளில் இயங்கும் ஈநாடு ஊடகம் மற்றும் ஐதரபாத்தில் உள்ள மாபெரும் படப்பிடிப்பு தளத்தை உருவாக்கியவரும், பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளருமான ராமோஜி ராவ், சனிக்கிழமை அதிகாலை ஐதராபாத்தில் காலமானார். அவருக்கு வயது 87.ராமோஜி ராவ் குழுமத்தின் தலைவராக இருந்த செருகுரி ராமோஜி ராவ், 1936ஆம் ஆண்டு பிறந்தவர்.
இவரது நிறுவனம் சார்பில், 1974ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில், ஈநாடு பத்திரிக்கை தொடங்கப்பட்டது
.
ஈ டிவி நெட்வொர்க் என்ற பெயரில் 8 இந்திய மொழிகளில் 12 தொலைக்காட்சி சேனல்களை நடத்தி வந்தார்.
உஷாகிரன் மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் சுமார் 80 திரைப்படங்களை பல்வேறு இந்திய மொழிகளில் ராமோஜி ராவ் தயாரித்துள்ளார்.13 இந்திய மொழிகளில் டிஜிட்டல் ஊடகங்களை ஈ டிவி நடத்தி வருகிறது.
பத்ம விபூஷன், நந்தி அவார்ட், பிலிம்ஃபேர் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவர்.2021ஆம் ஆண்டு இவரது சொத்து மதிப்பு சுமார் 37,583 கோடி ரூபாய்.
ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டி என்பது, 1666 ஏக்கரில் பறந்து விரிந்து கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய படப்பிடிப்பு தளங்களில் ஒன்றாகும்.இந்த ஸ்டுடியோ கின்னல் உலக சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.இந்த ஸ்டியோ உலகின் மாபெரும் சுற்றுலாத் தளமாகவும் விளங்குகிறது. வருடத்திற்கு சுமார் 15 லட்சம் பேர் இந்த தளத்தை பார்வையிடுகின்றனர். பாகுபலி படத்தின் இரு பாகங்களும், பெரும்பகுதி இங்கு தான் படப்பிடிப்பு செய்யப்பட்டன.இதுமட்டுமின்றி மார்க்கதர்ஸி சிட்பண்ட்ஸ், ராமதேவி பப்ளிக் ஸ்கூல், பிரியா ஃபுட்ஸ், டால்பின் குரூப் ஆஃப் ஹோட்டல்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ராமோஜி ராவால் நடத்தப்பட்டு வந்தன.
இவரது மறைவுக்கு ஆந்திரா, தெலுங்கானா, அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து, அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.