சினிமா

வணக்கம் பிரதர்.. “உங்களை நேரில் பார்க்க வேண்டும்” தன்னை வரைந்த ஓவியருக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் பாராட்டு..

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் “மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம்” அவர்கள் நடிகர் லாரன்ஸ் அவர்களின் சமூக சேவையை பாராட்டும் விதமாகவும், அதைப் பெருமைப்படுத்தும் விதமாகவும் கஷ்டப்படும் மக்களுக்கு கடவுள் போல் நேரில் வந்து உதவி செய்வதால் அவரை மனித ரூபத்தில் இருக்கும் கடவுள் லாரன்ஸ் என்று வாசகம் எழுதி மனித ரூபத்தில் இருக்கும் கடவுள் லாரன்ஸ் என்பதை குறிக்கும் விதமாக நடிகர் லாரன்ஸ் அவர்களை கடவுளாக பாவித்து தீபாராதனை காட்டியவாரே..

ஆரத்தி தட்டின் கீழ் ஸ்கெட்ச் வைத்து தீபாரதனை காட்டியவாரே ஆரத்தி தட்டாலேயே நடிகர் ராகவா லாரன்ஸ் படத்தை நான்கு நிமிடங்களில் ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்தார், இந்தச் செய்தியை சமூக வலைத்தளங்களிலும், தொலைக்காட்சியிலும் பார்த்த நடிகர் லாரன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் ஓவிய ஆசிரியர் செல்வத்தின் திறமையை பாராட்டியுள்ளார்.

லாரன்ஸின் எக்ஸ் பதிவில், வணக்கம் செல்வம் பிரதர், உங்கள் உழைப்பையும் திறமையும் உண்மையிலேயே பாராட்டுகிறேன்.ஒரு சிறிய வேண்டுகோள் நீங்கள் சொன்னது போல், நான் மனித கடவுள் அல்ல, என் அன்பான மக்களுக்கு கடவுளின் சேவகன். உங்களது அற்புதமான திறமைகளுக்காகவும் எனக்காக நீங்கள் எடுத்த முயற்சிகளுக்காகவும் விரைவில் சந்திப்பேன் என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button