சினிமா

திருமணத்தை ரத்து செய்யக் கோரி தனுஷ், ஐஸ்வர்யா மனு… 18 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது…

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா தம்பதி 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், தற்போது திருமணத்தை செல்லாததாக அறிவிக்கக் கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.
கருத்து வேறுபாடு ஏற்பட்டால், கணவன், மனைவி, விவகாரத்து பெற்று பிரிவது வழக்கம். ஆனால் தனுஷ், ஐஸ்வர்யா தம்பதி, திருமணத்தை செல்லாததாக அறிவிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இதற்கு என்ன காரணம் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

திருமணத்தின் போது, தம்பதிகளுக்கு போதிய வயது இல்லாமை, முடிவெடுக்க முடியாத நிலையில் கட்டாயத் திருமணம், போதை பொருள் ஆதிக்கத்தால் மனப்பிறழ்வு, ஏற்கனவே திருமணம் செய்திருத்தல், உள்ளிட்ட சில சர்ச்சைக்குரிய காரணங்கள் இருந்தால் மட்டுமே திருமணத்தை செல்லாததாக அறிவிக்க முடியும் என சிவில் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் எந்த காரணத்தை அடிப்படையாக வைத்து, திருமணத்தை செல்லாத என அறிவிக்க கோரியுள்ளனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Dhanush Aishwaryaa Divorce News: Dhanush & Aishwaryaa Rajinikanth call it  quits after 18 years of marriage, urge fans to respect their privacy - The  Economic Timesதிரைத்துறையில் உச்சத்தில் உள்ள நடிகர் ரஜினி காந்த்துக்கு 2 மகள்கள் மட்டுமே உள்ள நிலையில், இளைய மகள் சௌந்தர்யா அண்மையில் விவாகரத்து பெற்று புதிய வாழ்க்கையை தொடங்கினார்.
தற்போது, மூத்த மகள் ஐஸ்வர்யாகவும், விவாகரத்து பெற இருப்பது, ரஜினி ரசிகர்களையும், தனுஷ் ரசிகர்களையும் வேதனையடைச் செய்துள்ளது.

தனுசுக்கு திருமணம் நடைபெற்ற போது, அவருக்கு வயது 21 மட்டுமே. ஐஸ்வர்யாகவுக்கு 23. குறைந்த வயது திருமணத்தை ரத்து செய்யக் கோருவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என தெரிகிறது. திருமணம் ரத்து செய்யப்பட்டாலும், வாரிசுகள் சட்டப்பூர்வ உரிமை பெற்றவர்களாகவே இருப்பார்கள் என வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

இதே போல் ஜீவானம்சம் ஒரே தவணையாகவே, அல்லது வருட, மாதத் தவணையாகவோ பெற முடியும் என்றும் சிவில் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
2022 ஆம் ஆண்டு கணக்கின்படி தனுஷின் சொத்து மதிப்பு 160 கோடி ரூபாய். ஐஸ்வர்யா ரஜினி காந்தின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 40 கோடி ரூபாய். ரஜினி காந்தின் சொத்து மதிப்பு ஜெயிலர் படத்துக்கு முன்பு சுமார் 425 கோடி ரூபாய். ஆனால் அவர் ஜெயிலர் படத்துக்கு மட்டும் 210 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button