ரஜினி, கமலையே பயமுறுத்தியவர் – பின்னர் காமெடியனான சோகம்!

365 நாட்கள் ஓடிய சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர் ரஜினி, கமலையே தனது வெற்றியால் நடுங்க வைத்தவர்
தமிழ் பேச வராததால், காமெடியனாகி போன சோகம்…ரஜினி, கமல் இன்று வரை ஹீரோக்களாக நீடித்து வந்தாலும், இவர்களுக்கு பலர் அவ்வப்போது, கடும் சவால்களை கொடுத்தனர். சின்னத்தம்பி மூலமாக பிரபு, நாட்டாமை மூலம் சரத்குமார், கரகாட்டக்காரன் மூலம் ராமராஜ் என சிலரை குறிப்பிடலாம். அந்த வரிசையில் உள்ள நடிகர் தான் சுதாகர்..
பாரதி ராஜா தனது முதல் படமான 16 வயதினிலே, மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து, அவர் இயக்கிய இரண்டாவது படம் தான் கிழக்கே போகும் ரயில்.இதற்கு ஒரு புதுமுக நடிகர் தான் தேவை என அவர் தேடிய நிலையில், சென்னை திரைப்பட கல்லூரியில் படித்து விட்டு, வாய்ப்பு தேடி வந்த சுதாகர் கண்ணில் பட, அவரை ஹீரோவாக வைத்து, வேலையை தொடங்கினார் பாரதி ராஜா.இளையராஜாவின் இசையில், புரட்சிகர கதை மூலம் மாபெரும் வெற்றி பெற்றது கிழக்கே போகும் ரயில். இதில் கதாநாயகியாக உருவானவர் தான் ராதிகா. இன்று வரை திரைத்துறையில் fevicol போட்டு ஒட்டிக் கொண்டிருக்கிறார்.
கிழக்கே போகும் ரயில் 365 நாட்கள் ஓடிய நிலையில், ஒரே ஆண்டில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகமான உருவானார் சுதாகர்.ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவர், தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர். அதே நேரம் இவரை தமிழ்நாட்டுக்காரர் என்றே ஆரம்பத்தில் ரசிகர்கள் நினைத்தனர்.ஆனால் இவரது தெலுங்கு வாடை அடிக்கும் பேச்சு வழக்கு, முகம் ஆகியவை இவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரஜினி, கமலுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்திய சுதாகரின் அடுத்து வந்த படங்கள் பெரும் தோல்வியை தழுவின.
குறிப்பாக சுதாகர் நடித்த தை பொங்கல் திரைப்படம் கடும் தோல்வியை தழுவியது. சென்னையில் அவரது ரசிகர்கள் தியேட்டர் ஒன்றை சூரையாடும் அளவுக்கு படம் மோசமாக இருந்ததாக கூறப்படுகிறது.இதனையடுத்து, ஏற்கனவே அவருடைய சென்னை திரைப்பட கல்லூரி சீனியரான நடிகர் சிரஞ்சீவியின் படங்களில் காமெடியானாக நடிக்கத் தொடங்கி, குறிப்பிட்ட காலம் தெலுங்கு திரையுலகில் வலம் வந்துள்ளார்.ரஜினியின் அதிசயப்பிறவி, சுட்டிக் குழந்தை போன்ற படங்களில் தமிழில் இவர் மீண்டும் தலை காட்டினாலும், அது , தொடர்ந்து வலம் வர உதவவில்லை.
வெற்றி என்பது எல்லா நேரமும், நமக்கு கிடைப்பதில்லை. ஒரு முறை ஒரு வெற்றியின் மூலம் உச்சத்தை தொடுவது முக்கியமல்ல. அதனை தக்க வைப்பதே முக்கியம் என்பதை சுதாகர் உணர்த்தியுள்ளார்.தற்போது, வயது முதிர்வு காரணமாக, திரை வாழ்க்கையில் இருந்து ஒதுங்கி, ஆந்திராவில் குடும்பத்தினருடன் சுதாகர் வசித்து வருகிறார்.