விளையாட்டு

“MY Boy” யாசஸ்வியை புகழ்ந்து தள்ளிய பிரையன் லாரா!

தோனி, கோலி நிகழ்த்தாத சாதனையை நிகழ்த்தப் போகிறார் யாசவ்வி ஜெய்ஸ்வால் யாசஸ்வியை பார்த்து பயம் வருவதாக தெரிவித்த பிரையன் லாரா தனது 400 நாட் அவுட் டெஸ்ட் சாதனையை யாசஸ்வி முறியடிப்பார் என புகழாரம்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்து, தங்குவதற்கு இடம் கூட இல்லாமல், மைதானத்தில் கூடாரம் அமைத்து தங்கி, கடும் பயிற்சி எடுத்து, இன்று உலகத்தையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த வீரர் யாசஸ்வி ஜெய்ஸ்வால். இவரை பல வீரர்களும் பாராட்டி வரும் நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாராவும் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 9 போட்டிகளை மட்டுமே யாசஸ்வி ஆடியுள்ளார். ஆனால் அவரது சராசரி 70 ரன்கள் ஆகும். ஒரு சென்சுரியும், இரண்டு முறை இரட்டைச் சதமும் விளாசியுள்ளார்.

இந்நிலையில் ஐதராபாத் ஐ.பி.எல் அணியின் பயிற்சியாளரான பிரையன் லாரா, ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் யாசஸ்வியை பாராட்டியுள்ளதோடு, முதல் சந்திப்பிலேயே, யாசஸ்வியின் அடக்கம், தன்னை வெகுவாக ஈர்த்து விட்டதாக தெரிவித்துள்ளார். ‘

Yashasvi Jaiswal has got very good chance of...': Brian Lara | Cricket News - Times of Indiaஆட்டத்தின் போக்கிற்கு ஏற்றவாறு, வேகத்தை கூட்டவோ, குறைக்கவோ செய்யும் அவரது திறன் தான் தன்னை வெகுவாக கவர்ந்துள்ளதாக பிரையன் லாரா புகழாரம் சூட்டியுள்ளார்.
எனவே தனக்கு அச்சமாக இருப்பதாகவும், தனது 400 க்கு நாட் அவுட் என்ற டெஸ்ட் சாதனையை யாசஸ்வி முறியடிப்பார் என பயப்படுவதாக பிரையன்லாரா பாராட்டியுள்ளார்.

ஒரு முறை ஐ.பி.எல் போட்டி முடிந்து, தனது அறைக்கு வந்த போது, அங்கு யாசஸ்வி வந்ததாகவும், தன்னை கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்து, கிரிக்கெட் தொடர்பாக பல கேள்விகளை கேட்டு, தெளிவு பெற்றதாகவும், அதிகாலை 4 மணி அளவிலேயே தனது அறையில் இருந்து சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இடது கை பழக்கம் கொண்டவர் என்பதோடு, சாதுர்யமாக சிந்தித்தல், உழைத்தல், சாதாரண நிலையில் இருந்து முயன்று மேலே வந்தது போன்ற பல பண்புகள் தனக்கு பிடித்து விட்டதாக கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா குறிப்பிட்டுள்ளார். பிரையன் லாராவின் டெஸ்ட் கிரிக்கெட் சாதனையை 20 ஆண்டுகள் கடந்தும் இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.

400க்கு நாட் அவுட் என்ற சாதனையோடு, முதல் இடத்தில் அவர் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன் 380 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளார்.
3வது இடத்திலும் பிரையன் லாராவே உள்ளார். அந்த முறை 375 ரன்கள் எடுத்து, ஆட்டமிழந்தார்.

இந்திய வீரர்களில் சேவாக், கே.கே. நாயர் உள்ளிட்டவர்கள் மட்டுமே 300 ரன்களை கடந்துள்ளனர்.இந்த நிலையில் சச்சின், தோனி, விராட்கோலி நிகழ்த்தாத சாதனையை, யாசஸ்வி நிகழ்த்துவார் என குறிப்பிட்டுள்ளார் பிரையன் லாலா.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button