உலகம்வைரல்

முகத்தில் ஏற்பட்ட காயம் – மூலிகை மூலம் குணப்படுத்திய உரக்குட்டான்! மருத்துவர்கள் ஆச்சர்யம்!

முகத்தில் ஏற்பட்ட காயத்திற்கு தானே மூலிகை மருந்து கண்டுபிடித்த உரக்குட்டான் 3 நாளில் குணமாக்கி, மருத்துவர்களையே ஆச்சர்யப்படுத்திய குரங்கு…

video link :

https://fb.watch/rSRGhbtdw_/

படித்த மருத்துவர்கள், சோதனைகள் மூலம் கண்டுபிடிக்கும் முக்கிய மூலிகை மருந்தை, உரக்குட்டான் குரங்கு, எந்த சோதனையும் இல்லாமல், கண்டுபிடித்து, தனது காயத்தை தானே குணமாக்கிய நிகழ்வு உலகம் முழுவதும் ஆச்சர்ய செய்தியாக மாறியுள்ளது.

இந்தோனேஷியாவின் மழைக்காடுகளில் இரண்டு உரக்குட்டான் ஆண் குரங்குகள் சண்டையிட்டதில், ஒரு குரங்கிற்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் முகத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்த குரங்கை கண்காணித்து வந்த, வனவிலங்கு மருத்துவர்களுக்கு 3 நாட்களுக்கு பிறகு, பெரும் ஆச்சர்யம் நிகழ்ந்துள்ளது.

Orangutan seen treating wound with a medicinal plant — a firstகுரங்கின் முகத்தில் முற்றிலுமாக காயம் குணமடைந்திருப்பதை கண்டுபிடித்தனர்.இதற்கான காரணத்தை ஆய்வு செய்த போது, காயம் அடைந்த உரக்குட்டான் Akar Kuning என்ற வெற்றிலை போன்ற இலையை வாயில் வைத்து, மென்று, கூலாக்கி, அதனை காயத்தின் மீது தடவியுள்ளது.இதே போல், அந்த இலையை சாப்பிட்டுள்ளது.

இதன் காரணமாகவே அந்த காயம் விரைவில் குணமடைந்துள்ளது. அந்த இலையை பரிசோதனை செய்த போது, அதில், பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற குணங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் அந்த இலையை பரிசோதனைக் கூடத்தில் வைத்து, சோதித்த பிறகே, அந்த இலையில், காயத்தை குணப்படுத்தும் தன்மை இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

ஆனால் ஒரு 5 அறிவு ஜீவனுக்கு அது எப்படி தெரிந்தது என்பது தான் கேள்வி. வழக்கமாக விலங்குகள் இதுபோன்ற சுய மருத்துவம் செய்து கொள்ளும் என கூறப்பட்டாலும், முதன் முறையாக உரக்குட்டான்கள் சுய மருத்துவம் செய்து, அதில் வெற்றி பெற்ற நிகழ்வு, முதன்முறையாக தற்போது தான் ஆவணப்படுத்துப்பட்டுள்ளது.

இதனை ஒரு பிரிவினர் இயற்கை என்றும் ஒரு பிரிவினர் கடவுளின் அற்புதம் என்றும் கருதுகின்றனர்.

https://fb.watch/rSRGhbtdw_/

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button