திருமணமான இரண்டே மாதத்தில் குழந்தை பெற்றுக்கொண்ட ஹர்திக் பாண்டியா – நடாசா ஜோடி

மே மாதம் திருமணம்..ஜூலையில் குழந்தை..பலரும் அறியாத ஹர்திக் பாண்டியாவின் திருமண வாழ்க்கை..
நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்துவரும் ஹர்திக் பாண்டியா நடாசா ஜோடி திருமணமான இரண்டே மாதத்தில் குழந்தை பெற்றுக்கொண்ட சம்பவம் தற்போது பாலிவுட் மீடியாக்களில் ஹாட்டாப்பிக்காக மாறியுள்ளது.
குஜராத்தை பூர்வீகமாகக் கொண்ட ஹர்திக் பாண்டியா ஆரம்பகாலத்தில் உள்ளூர் கிரிக்கெட்டில் பரோடா அணிக்காக விளையாடியவர். தனது சிறப்பான ஆட்டத்தால் இந்தியாவுக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.
முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவை அவர் நடத்திய விதம் ரசிகர்களை கோபமூட்டியது.
இந்நிலையில் அவரின் திருமண வாழ்வும் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.பாலிவுட் நடிகை நடாசாவை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக ஜனவரி 2020ஆம் ஆண்டு ஹர்திக் பாண்டியா அறிவித்தார்.
அதன்படி மே 2020ல் இருவரின் திருமணமும் நடைபெற்றது. அச்சமயம் கொரோனா காலகட்டம் என்பதால் ஹர்திக்கின் திருமணம் ஆடம்பரமின்றி எளிமையாக நடைபெற்றது. ஆனால் அதற்கு அடுத்து நடந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.மே மாதம் திருமணம் செய்துகொண்ட ஹர்திக் நடாசா ஜோடி ஜூலை மாதத்தில் குழந்தை பெற்றுக் கொண்டதாக செய்தி வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது.
அதன்பின்னரே அவர்கள் இருவரும் திருமணத்திற்கு முன்பே டேட்டிங்கில் இருந்துவந்ததும்,
திருமணத்திற்கு முன்பே நடாசா கர்ப்பமானதும் வெளி உலகிற்கு தெரிய வந்தது பரபரப்பிற்கு பஞ்சமில்லாத ஹர்திக், கிரிக்கெட் தொடங்கி தனது திருமண வாழ்வு வரை பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.
பாலிவுட் துறையில் கோலோச்சியிருக்கும் டேட்டிங் கலாச்சாரம் கிரிக்கெட் பிரபலங்கள் வரை சாதாரண ஒன்றாக மாறிவிட்ட நிகழ்வு தற்போது பாலிவுட் மீடியாக்களில் பேசுபொருளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.