மேங்கோ ஜுஸ், தட்பூசணி, நீர் மோர், ஆப்பிள், ஆரஞ்சு – கொளுத்தும் வெயிலுக்கு குளுகுளு..!

கொளுத்தும் வெயிலில் குளு குளு மேங்கோ ஜுஸ்… தட்பூசணி..
தொழிலாளர்களை உற்சாகப்படுத்தி கோவை சமூக ஆர்வலர்அடிக்கிற வெயிலுக்கு… ஒரு நிமிசத்துக்கு ஒருமுறை தண்ணீ குடிச்சாலும் பத்தாது
இந்த சூழல்ல கோவை.. உக்கடம் பகுதியில இந்த வெயில் கொடுமையில இருந்து காப்பாத்து கடவுளேனு பிரார்ததனை பண்ணிட்டு போன மக்களுக்கு… உடனே கை மேல பலன் கிடைச்சிருக்கு…
ஒரு பெரிய டிரம் நிறைய நீர் மோர்… மேங்கோ ஜுஸ்… தட்பூசணி பழம், ஆப்பிள், ஆரஞ்சு, தண்ணீர்னு, எது வேண்டுமோ, எவ்வளவு வேண்டுமோ வந்து தாராளமா சாப்பிட்டு போங்கனு… கொடுத்திருங்காங்க…
அது மட்டுமில்ல,, வாயில ஊட்டியும் விட்டிருக்காங்கனா பாத்துக்கோங்க…
அந்த பகுதியில போன தொழிலாளர்கள், பொதுமக்கள்னு பலரும் ஒரு பிடி பிடிச்சிருக்காங்க…
இதுலாம் யாருங்க ஏற்பாடு செஞ்சதுன்னு கேட்டும் போது, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி வரும், பல்சமய நல்லுறவு இயக்கத் தலைவர் முகம்மது ரபி, இந்த ஏற்பட்டச் செய்ததாகவும், கோவை மாமன்ற உறுப்பினர் முபஷீரா உக்கடம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்ததாகவும் சொல்லி இருக்காங்க…
நீங்க கோயமுத்தூரா இருந்தா… நீங்களும் அந்த பக்கம் கொஞ்சம் போய்ட்டு வாங்க…