இந்து பக்தர்களுக்கு மாம்பழச்சாறு, ப்ரூட் கேக் வழங்கிய இஸ்லாமியர்கள்…!

மாம்பழச் சாறு, ப்ரூட் கேக்…
இந்து பக்தர்களுக்கு இனிப்பு கொடுத்த இஸ்லாமியர்கள்…
தமிழ்நாட்டில் தலைத்தோங்கும் மத நல்லிணக்கம்… பல மதங்கள் வாழக்கூடிய நம்முடைய இந்திய நாட்டில, பல இடங்கள்ள மத ரீதியான பிரச்னைகள் உருவாக்கப்பட்டாலும், நம்ம தமிழ்நாட்டில மட்டும் அதுக்கு வாய்ப்பே இல்ல… அதுக்கு காரணம் இங்க உள்ள அனைத்து தரப்பு மக்கள் தான்…
அந்த வகையில ஒரு சூப்பரான சம்பவம் தான் கோவைல நடந்திருக்கு.. கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில விளையாட்டு மாரியம்மன் கோவில் இருக்கு…இந்த கோவில் தேர் திருவிழாவில கலந்து கொண்ட பக்தர்களுக்கு உள்ள தரிக்கத்துல் இஸ்லாம் ஷாபியா சுன்னத் ஜமாத் என்ற பள்ளிவாசல் முன்பு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது…
மாஸா மாம்பழச் சாறு… ப்ரூட் கேக், தண்ணீர் வழங்கி, பக்தர்களிடம் மத நல்லிணக்கம் பேணி இருக்காங்க… அங்க உள்ள இஸ்லாமியர்கள்… அலகுகுத்தி, தீச்சட்டி ஏந்தி , பால்குடம் ஏந்தி, களைப்புடன் வந்த பக்தர்கள், இதமான பானங்கள அருந்தி, இஸ்லாமியர்களுக்கு நன்றி சொல்லிட்டு போய் இருக்காங்க…
இந்த ஒற்றுமை தான் நம்ம நாட்டுக்கு இப்போ ரொம்ப முக்கியம்… இது சம்பந்தமா உங்களுடைய கருத்துக்கள நீங்க பதிவு செய்யுங்க…
===========