
உன் கணவன் வரும் வரை என்னுடன் வா…
EMI கட்டாத கூலித் தொழிலாளி….
மனைவியை அழைத்துச் சென்ற வங்கி ஊழியர்…
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.கொத்தனார் வேலை செய்து வரும் பிரசாந்த் என்பவர், குடும்ப சூழ்நிலை காரணமாக IDFC FIRST BHARAT தனியார் வங்கியில் 35 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். வாரா வாரம் 770 ரூபாய் இஎம்ஐ கட்டி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த வார இஎம்ஐ கட்டுவதற்கு அவரிடம் பணம் இல்லை என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அவரது வீட்டிற்கு வந்த வங்கி ஊழியர் சுபா என்பவர், பிரசாந்த் இங்கு வர வேண்டும் என அவரது வீட்டிலேயே மாலை வரை காத்திருந்துள்ளார்.பிரசாந்த் அங்கு வராததால், செவ்வாய்கிழமை மாலை 7.30 மணியளவில், பிரசாந்தின்மனைவி, கௌரியை, வங்கிக்கு வருமாறு அழைத்துச் சென்றுள்ளார்.
இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், பிரசாந்த், 770 ரூபாய் தவனை தொகையை எடுத்துச் சென்று, வங்கி ஊழியர்களிடம் கொடுத்து, தனது மனைவியை மீட்டு வந்துள்ளார்.இந்தச் சம்பவம் வாழப்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொது வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் பணம் பெற்ற பணக்காரர்கள், அந்த பணத்தை திருப்பிச் செலுத்தாமல், வெளி நாட்டுக்கு தப்பி ஓடுவதும், சில பணக்காரர்களின் பல ஆயிரம் கோடி ரூபாய் கடனை அரசே தள்ளுபடி செய்வதும் செய்திகளாக உள்ளன.
இந்த சூழலில் வெறும் 770 ரூபாய் இஎம்ஐ செலுத்த முடியாத கூலித் தொழிலாளியின் மனைவியை, தனியார் வங்கி, அழைத்துச் சென்ற நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.