சினிமா

ஜாக்கிசான், ஷாருக்கான் ஐ விட அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்?

ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யார் என்றால் நம்மில் பலர் ஜாக்கிஜான் என்றோ, அல்லது ஷாருக்கான், சல்மான்கான் என்றோ கூறக்கூடும். ஆனால், உண்மையில் சினிமாவில் அதிக சம்பவம் வாங்குபவர் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் என்பது பலரும் அதிர்ச்சியளிக்கும் உண்மையாக இருக்க கூடும். வாருங்கள் அவர் யார் என்பதை பார்க்கலாம்.

ஒரு காலத்தில் ஆசிய சினிமா என்றாலே அது சீனபடங்களை குறிப்பதாக மட்டுமே இருந்தது. அதன்பின்னர் பாலிவுட்டின் வளர்ச்சி காரணமாக சீனப்படங்களின் இடத்தை பாலிவுட் பிடித்தது. ஆனால், தற்போது காலமே மாறிவிட்டது. தமிழ் மட்டும் தெலுங்கு திரைப்படங்களும் இந்த பட்டியலில் நுழைந்து சாதித்து வருகின்றது.

தமிழ் திரையுலகம் இந்த அளவு வளர்ச்சியை சந்தித்தலில் நடிகர் ரஜினிக்காந்தின் பங்கு மிகமுக்கியமானது. எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் நடிப்பு துறையில் நுழைந்து அவர்களின் காலத்துக்கு பிறகு தமிழ் சினிமாவின் அடையாளமாக ரஜினிகாந்த் மாறினார் என்றால், தற்போது அவருக்கு அடுத்த தலைமுறையிலும் அந்த பட்டத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் தமிழில் உச்சபட்ச நட்சத்திரமாகவே விளங்கி வருகிறார்.

Thalaivar 171: Rajinikanth Creates History By Charging 250+ Crores As His Salary For Lokesh Kanagaraj's Film, Becomes Highest-Paid Actor In Asia?தமிழ் சினிமாவில் கோடிகளில் சம்பவம் வாங்கிய முதல் நடிகரான ரஜினிகாந்த்தான் தற்போது இந்தியாவிலேயே அதிகம் சம்பவம் வாங்கும் நடிகராக உயர்ந்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் 600 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக கூறப்பட்டது. இதன் காரணமாக தனது அடுத்த படத்துக்கான சம்பளத்தை ரஜினிகாந்த் அதிகரித்துள்ளார்.

அதன்படி அடுத்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்கவுள்ள ரஜினிகாந்துக்கு 280 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஆசியாவிலேயே அதிக சம்பலம் வாங்கும் நடிகர் என்ற பெருமையை ரஜினிகாந்த் பெற்றுள்ளார்.

இது மட்டுமல்ல, இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பதும் ஒரு தமிழ் நடிகர்தான். ரஜினிகாந்த் கமல்ஹாசன் காலத்துக்கு பிறகு தமிழின் உச்சநட்சத்திரமாக விளங்குபவர் என்றால் அது நடிகர் விஜய்தான். இவர் கடைசியாக நடித்த லியோ படத்துக்காக 250 கோடி வரை சம்பளமாக பெற்றதாகவும், அடுத்ததாக நடித்து வரும் படத்துக்கும் இதே அளவு சம்பவம் பெறுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆசியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலின் முதல் இரண்டு இடத்தில் தமிழ் சினிமாவின் நாயகர்களே இருக்கிறார்கள் என்பது தமிழ் சினிமா துறைக்கு பெருமை தரக்கூடியதாவும்.

இவர்களுக்கு அடுத்த இடத்தில் பதான் மற்றும் ஜவான் படங்களுக்கு தலா 210 கோடி சம்பவம் வாங்கிய நடிகர் ஷாருக்கான் இருக்கிறார். அதே போல பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்ட நடிகர் பிரபாஸ் ஒரு படத்துக்கு 150 கோடியை சம்பளமாக பெற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button