காசாவில் மருந்துகள் இன்றி உயிருக்கு போராடும் 9000 புற்று நோயாளிகள்!

காசாவில் செயல்பட்ட புற்று நோய் மருத்துவமனைகள் தகர்ப்பு…
மருந்துகள் சிகிச்சை இன்றி உயிருக்கு போராடும் 9000 நோயாளிகள்…
அணுஅணுவாக உயிரிழக்கும் அபாயம்…
காசா மீதான இஸ்ரேலின் போர் 262வது நாளை எட்டியுள்ளது. ஒவ்வொரு நாளும் 100க்கணக்கான அப்பாவி பெண்கள், குழந்தைகள் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளால் கொல்லப்பட்டு வருகின்றனர். இதுவரை சுமார் 38 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 1 லட்சம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
முக்கிய மருத்துவமனைகள் தகர்க்கப்பட்டுள்ளன. சுமார் 8 ஆயிரம் பேர் புற்று நோய்க்கு ஆளாகியுள்ள நிலையில், அவர்களுக்கு தேவையான அறுவை சிகிச்சைகள் செய்ய முடியாத நிலை உள்ளது. கதிர் இயக்க சிகிச்சைகள், வலி நிவாரண மருந்துகள் கிடைக்காத சூழல் நிலவி வருகிறது.
நோயாளிகளை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்வதற்கான வழிகளையும் இஸ்ரேல் மூடி, அனுமதி மறுத்துள்ளது.
காசாவில் உள்ள அல் ரன்திசி மருத்துவமனை, துருக்கி நட்புறவு மருத்துவமனை உள்ளிட்ட 2 புற்று நோய் சிறப்பு மருத்துவமனைகளும் இஸ்ரேலின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு, தங்களது செயல்பாடுகளை நிறுத்தியுள்ளன.
இந்நிலையில் புற்று நோய் பாதிப்பு ஆளானவர்கள் அணுஅணுவாக மரணத்தை நோக்கி நகர்ந்து வருவதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
====