ஒரே நாளில் ஹிஸ்புல்லாவின் 9 நடவடிக்கைகள்! இஸ்ரேல் உளவு கருவிகள் அழிப்பு!

ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 9 நடவடிக்கைகளை மேற்கொண்ட ஹிஸ்புல்லா…
உளவு கருவிகள் அழிக்கப்பட்டதாக ஆக்கிரமிப்பு ஊடகங்கள் ஒப்புதல்…
குண்டு மழை பொழியும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பு…
இஸ்ரல் மீது மிகப்பெரும் தாக்குதலுக்கு தயாராகி வரும் ஹிஸ்புல்லா அதற்கு முன்னதாக தனது அன்றாட தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரவு வரை 9 தாக்குதல்களை ஹிஸ்புல்லா நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலின் போது ஹிஸ்புல்லா fpv எனப்படும் தனி நபர்களால் கண்காணிக்கப்பட்டு இயக்கப்படும், ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி உள்ளது. 2 இடங்களில் இஸ்ரேல் உளவுத்துறை கருவிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.இந்த செய்தியை ஆக்கிரமிப்பு ஊடகங்களும் வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு வீரர்கள் குழுமி இருந்த 2 இடங்களை குறிவைத்து ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியுள்ளது. ஹிஸ்புல்லாவின் தாக்குதலில் உயிரிழப்புகளோ காயங்களோ ஏற்படவில்லை என்றும் அதே நேரம் பல இடங்களில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆக்கிரமிப்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.