சினிமா

80 வருடத்திற்கு முன்பே ரூ. 1 லட்சம் சம்பளம் – முதல் லேடி சூப்பர் ஸ்டாரின் கதை!

இன்னைக்கு நம்ம தமிழ்நாட்டில இருக்கிற ஹீரோயின்கள்ளல அதிக பேர், ஒன்னு கேரளால இருந்து வந்திருப்பாங்க… இல்ல மும்பையல இருந்து வந்திருப்பாங்க…ஆனா ஒரு காலத்துல நம்ம தமிழ்நாட்டுடைய லேடி சூப்பர் ஸ்டார் நம்ம தமிழ்நாட்டைச் சேர்ந்தவரா இருந்தாங்க… அது மட்டுமல்ல, அந்த டைம்ல இந்தியாவிலேயே அதிக சம்பள வாங்கிற நடிகை னா அதுவும் இவங்க தான். சுமார் 87 வருஷத்துக்கு முன்னாலேயே 1 லட்சம் ரூபாய் சம்பள வாங்கி இருக்காங்க… அவங்க தான் கே.பி. சுந்தராம்பாள். அவங்கள பத்தின பல சுவாரஸ்யமான தகவல்கள பாக்கிறதுக்கு முன்னால, நம்ம Q7 நீங்க சேனல சப்ஸ்கிரைப் பண்ணலான. சப்ஸ்கிரைப் பண்ணுங்க…சரி வீடியோக்குள்ள போலாம்.
கே.பி. சுந்தாரம்பாளுடைய சொந்த ஊரு, ஈரோடு மாவட்டம் கொடுமுடி.

இவங்க குடும்ப சூழல் காரணமாக சிறுமியா இருந்தப்ப, ரயில்ல பாட்டுபாடி யாசகம் கேட்டு வந்திருக்காங்க… அந்த டைம்ல, இந்த மாதிரிய நிறைய குரூப் இருந்திருக்காங்க… இவங்க பாடக் கூடிய பாடல்கள பெங்கர் சாங்ஸ்னு சொல்லுவாங்களாம்.அப்படித் தான் ஒருமுறை கே.பி. சுந்தராம்பாள் பாட்டு பாடியத கேட்ட, பிரான்சிஸ் ஜார்ஜ் நடேச அய்யர் என்பவர், அப்படியே பிரமிச்சு போய்ட்டாரா… காரணம் அந்த அளவுக்கு அந்த சிறுமியோட வாய்ஸ் ரொம்ப கனீர்னு இருந்திருக்கு…நீயெல்லாம் இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை, என்னோட வாமானு அழைச்சிட்டு போய், தான் நடத்திய கச்சேரிகள்ல பாட்டு பாட வாய்ப்பு கொடுத்திருக்காரு பிரான்சிஸ் ஜார்ஜ் நடேச அய்யர். இவர் தான், கிட்டப்பா, தியாகராஜ பாகவாதர் போன்ற பலருக்கும் வாய்ப்பு கொடுத்தவர்.

கே.பி. சுந்தராம்பாளும் கிட்டப்பாவும் சேர்ந்து நாடகம் போட்டங்கனா, இவங்க கிட்டத்துலயே யாரும் வர முடியாது. அப்படி அடிச்சு துவம்சம் பண்ணுவாங்களாம்…இவங்களுடைய வள்ளி திருமண நாடகத்துக்கு அடிமையா இருந்த நம்ம செட்டி நாட்டு பணக்காரங்க… நாடகம் முடிஞ்ச கையோட, பணத்தை அள்ளி வீசி, பண மழை கொட்டச் செய்வாங்களாம்….இப்படியே சுந்தாம்பாளும், கிட்டப்பாவும், கிட்ட கிட்ட இருந்து நடிச்சதுனால இவங்களுக்குள்ள காதல் பத்திக்கச்சு…ரெண்டு பேரும் கல்யாணமும் பண்ணிக்கிட்டாங்க…சந்தோஷமா நட்சத்திர ஜோடியா வலம் வந்திட்டு இருந்த இவங்க மேல யாரு கண்ணு வச்சாங்கனு தெரியல. ரெண்டு பேரும் திடீர்னு பிரிஞ்சிட்டாங்க… கிட்டப்பா குடி பழக்கத்துக்கு ஆளாகி, 28 வயசுலயே இறந்து போய்ட்டாரு..

அப்போ கே.பி. சுந்தராம்பாளுக்கு வயசு வெறும் 25. இதனால் பெரும் மன உலைச்சலுக்கு ஆளான கே.பி. சுந்தராம்பாள், இனி நான் எந்த ஆண் நடிகர் கூடவும் சேர்ந்து நடிக்க மாட்டேன். அதே போல வெள்ளை உடை தான் உடுத்திட்டு நடிப்பேன் ரொம்வும் உறுதியாக இருந்திருக்காங்க…இப்ப உள்ள நடிகர்கள் மாதிரி 100, 200 படங்களிலெல்லாம் கே.பி. சுந்தராம்பாள் நடிக்கல. அவங்க மொத்தம் நடிச்சரே 12 படங்கள் தான். ஆனா ஒவ்வொரு படத்துக்கும் இருந்த வரவேற்புனால, தயாரிப்பாளர்கள், நீ நான் போட்டி போட்டுக்கிட்டு வருவாங்களாம்…
நம்ம கே.பி. சுந்தராம்பாள் ரொம்ப பெரிய கடவுள் பக்தை. அந்த காலத்தில கடவுள் மறுப்பு கொள்கை ரொம்பவும் வேகமாக வளர்ந்திட்டு வந்துச்சு. இந்த சூழ்நிலைல, பூம்புகார் ஒரு படம் நம்ம கலைஞர் கருணாநிதி அவர்களுடைய எழுத்தில தயாராகி இருந்தது. இதுல நடிக்கனும்னு கே.பி. சுந்தராம்பாள கேட்டிருக்காங்க… ஆனா கலைஞர் நாத்திகர். எப்படியும் நாத்திக கருத்துக்களை தான் படத்தில சொல்வாரு. அதனால நடிக்க மாட்டேனு தயக்கம் காட்டி இருக்காங்க…

நம்ம கலைஞர் என்ன அவ்வளவு சாதாரணமான ஆளா… இந்த படத்தில நாத்திக கருத்துக்களை நீங்க பேசறமாதிரி எதுவும் இருக்காதுனு காம்பரமைஸ் பண்ணி நடிக்க வச்சிட்டாரு. ஆனா சைடு கேப்ல ஒரு பாட்டுல, நாத்திக கருத்து வற்றமாதிரி எழுதிட்டார் கலைஞர். இதை கரெக்டா கண்டுபிடிச்ச அந்த அம்மா, பாருங்க, இதுக்கு தான் நான் அப்பவே சொன்னேன். இவரு படத்தில நடிக்க மாட்டேனு. இப்ப பாருங்க அவர் வேளைய காட்டிடார்னு டென்சன் ஆகி இருக்காங்க…அந்த பாடல் வரி என்னனா…அன்று கொல்லும் அரசன் ஆணை வென்றுவிட்டது. நின்று கொல்லும் தெய்வம் எங்கே சென்று விட்டது. இது தான் அந்த வரி… அப்றோ அந்த அம்மா பிரச்னை பண்ணதால. கலைஞர் அந்த வரிய மாத்திட்டாரு. எப்படி மாத்னாருனா. அன்று கொல்லும் அரசன் ஆணை வென்றுவிட்டது. நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டதுனு மாத்திட்டாரு.

கே.பி. சுந்தராம்பாள் 1935ஆம் ஆண்டு நந்தனார் படத்துக்காக 1 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினாங்க… இந்தியாவிலேயே ஒரு நடிகை வாங்கின அதிக பட்ச சம்பளம் இது தான்னு சொல்லப்படுது.அந்த காலத்துல ஒரு படத்தோட மொத்த செலவே வெறும் 40 ஆயிரம் ரூபா தான்.நம்ம சுந்தராம்பாள் 800 பாடல்கள பாடி இருக்காங்க… ஆன இப்போ அவைலபிள் உள்ளது 250 பாடலகள் தான்.இப்பலாம் படத்தில ஒன்னு, ரெண்டு பாட்டு தான் வைக்கிறாங்க… அதுக்கே, வெளியே எந்திருச்சு போய்கிடாங்க ஆடியன்ஸ். ஆனா அப்பலாம் ஒரு படம் 3 மணி நேரம் ஓடுதினா, இரண்டரை மணி நேரம் பாட்டு மட்டுமே ஓடும். சும்மா பாடி தள்ளுவாய்ங்க..உதாரணத்திற்கு ஔவையால் படத்தில 48 பாடல்கள், இதில் 30 பாடல்கள் சுந்தராம்பாள் பாடியது.

வாழ்க்கை எனும் ஓடம் பாட்டு ரொம்ப பேமஸ். இத எழுதினவர் கலைஞர் கருணாநிதி.தேச பக்தராகவும் இருந்தவர் கே.பி. சுந்தராம்பாள். காங்கிரஸ் கட்சி மேடைகள்ள அதிகமாக பாட்டு பாடி இருக்காங்க. இதனால 1958 ஆம் ஆண்டு, சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினரா, அதாவது எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டிருக்காங்க…ரயில்ல பாட்டு பாடிய சிறுமி, தனது திறமையால, சினிமாவில சாதிச்சது மட்டுமின்றி, அரசியலில் சாதிச்சிருக்காங்க… இவருக்கு குழந்தை இல்லை. நேரடி வாரிசுகள் யாரும் இல்ல. தாய் மாமா போன்றவர்களின் வாரிசுகள் இவரது சொத்துக்கள பராமரிக்கிறதா கூறப்படுது.

அந்த காலத்தில கூட, கிராமங்கள்ள ஆபாச நடனம் போன்ற பல விசயங்கள் இருந்திருக்கு. ஆனா, தேசபத்தி, தெய்வ பக்திபாடல்கள், வெள்ளை விதவை உடை, ஆண் நடிகருடன் நடிக்க மாட்டேன் இப்படி பல கண்டிசன் போட்டும் கூட, நம்பர் ஒன் நடிகையாக உயர்ந்திருக்காங்க கேபிஎஸ் …இன்னைக்கு இருக்கிற பல நடிகைகள், வாய்ப்புக்காக, ஆபாச படங்களை, போட்டோ ஷூட்ங்கிற பேர்ல, சமூக வலைதளங்களில் வெளியிட்டிட்டு இருக்காங்க… மக்கள் மீது எந்த அக்கறை இல்லாதவர்களாகவும் இருக்காங்க… கே.பி. சுந்தாம்பாளின் இந்த சக்ஸ் இப்போ இருக்கிற நடிகைகளுக்கு ஒரு நல்ல ரோல் மாடல்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button