உலகம்

நெதன்யாகுவின் பேச்சை புறக்கணித்த 70 அமெரிக்க எம்.பி.க்கள்!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசிய நெதன்யாகு…
கூட்டத்தை புறக்கணித்த 70 ஆளும் கட்சி எம்.பி.க்கள்…

சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தால் போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு பேச அனுமதி அளித்ததன் மூலம் அமெரிக்க நாடாளுமன்றம் தனது ஜனநாயகத் தன்மையை காலில் போட்டு மிதித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அமெரிக்காவை ஆளும் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசுக் கட்சிய ஆகிய இரு கட்சிகளும் நெதன்யாகுவை வரவேற்றன. அதே நேரம் ஆளும் ஜனநாயக கட்சியின் 70 எம்.பி.க்கள் நெதன்யாகுவின் பேச்சை புறக்கணித்து, கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

அமெரிக்க மக்களவையில் 435 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 100 உறுப்பினர்களும் உள்ளனர். இதில் 70 பேர் புறக்கணித்திருப்பது, நெதன்யாகுவிற்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. அதே நேரம் டொனால்டு டிரம்பின் குடியரசுக் கட்சியில் ஒரு ஒரு உறுப்பினர் மட்டுமே நெதன்யாகுவின் உரையை புறக்கணித்துள்ளார்.

நெதன்யாகு – டொனால்டு டிரம்ப் சந்திப்பு நடைபெறுகிறது. இதற்கு முன்பாக பேசியுள்ள டொனால்டு டிரம்ப், காசாவில் உடனடி போர்நிறுத்தம் அவசியம், இஸ்ரேலின் பெயர் சர்வதேச அளவில் மிகவும் கெட்டுப் போய் உள்ளது. நல்ல பெயரை சம்பாதிப்பதில் இஸ்ரேல் எப்போதும் பின்னடைவாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஆளும் கட்சியான ஜனநாயக கட்சியும் போர்நிறுத்தத்தை வலியுறுத்தி வரும் நிலையில், டொனால்டு டிரம்பும் அதனை வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் யாருடைய அறிவுரைகளையும் ஏற்காமல் இஸ்ரேல் தொடர்ந்து, இனப்படுகொலைகளை காசாவில் கட்டவிழ்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

======

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button