காசாவில் இஸ்ரேலிய படையினர் 7 பேர் படுகாயம் – 4 பேர் கவலைக்கிடம்!

ஆக்கிரமிப்பு படைகள் மீது தொடர் தாக்குதல் நடத்தும் ஹமாஸ்…
7 இஸ்ரேல் ராணுவத்தினர் படுகாயம்… 5 பேர் கவலைக்கிடம்…
காசா மீதான தாக்குதலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 40 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 71 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காசாவில் இருந்து திருடிச் சென்ற 90 பாலஸ்தீனியர்களின் உடல்களை இஸ்ரேல் மீண்டும் காசாவிற்கு கொண்டு வந்துள்ளது.
இந்த உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துள்ளன. சில உடல்களில் மண்டை ஓடுகள் மட்டுமே உள்ளன. இதுவரை மொத்தம் 39ஆயிரத்து 623 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 91469 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கடந்த 5 நாட்களில் 143 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 341 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
10 ஆயிரம் பேர் காணாமல் போய் உள்ளனர். அவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த நிலையில், இஸ்ரேலிய படைகளை 305வது நாளாக பாலஸ்தீன போராளிக்குழுக்கள் எதிர்த்து சண்டையிட்டு வருகின்றன.
இஸ்ரேல் படையினர் மீது, வடக்கு தெற்கு, மத்திய பகுதிகளில் திங்கட்கிழமை தொடர் தாக்குதல்களை நடத்தியதாக பாலஸ்தீன குழுக்கள் தெரிவித்துள்ளன. இதில் ஹமாசின் சுரங்கத்திற்குள் சென்ற ஆக்கிரமிப்பு படைகள், அங்கு முன்கூட்டியே திட்டமிட்டு வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதே போல் ஆக்கிரமிப்பு படைகள் தங்கிருந்த ஒரு கட்டிடத்திற்குள், ஏற்கனவே ஹமாஸ் வைத்திருந்த வெடிகுண்டு வெடித்து, பலர் படுகாயம் அடைந்துள்ளனர். தங்களது அண்மைத் தாக்குதல்களில் இஸ்ரேல் தரப்பில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் காயம் ஏற்பட்டதாகவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.
ஆனால் தங்கள் தரப்பில் 7 பேர் மட்டுமே காயம் அடைந்துள்ளதாகவும், அதில் 5 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு ராணுவம் கூறியுள்ளது.
இதே போல் இஸ்ரேலை நோக்கி 15 ராக்கெட்டுகளை ஏவியுள்ளதாகவும் ஹமாசின் அல் கஸ்ஸாம் ராணுவம் தெரிவித்துள்ளது. இதில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர் ஒருவர் காயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
=================