தமிழ்நாடு

3 டூவிலர்களில் வந்த 6 பேர்! வட சென்னையில் கடும் பதற்றம்!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெரம்பூர் செம்பியத்தில் தனது வீட்டின் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனது நண்பர்களோடு அவர் பேசிக் கொண்டிருந்த போது, 3 இரு சக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் இந்த படுகொலையை அரங்கேற்றி இருப்பதாக தெரியவந்துள்ளது.

தாக்குதல் நடைபெற்றபோது, அவருடன் இருந்தவர்களை அந்த கும்பல் விரட்டியடித்துள்ளளது. ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர், அந்த இடத்திற்கு வருவதற்குள் அவரது உடலில் பல இடங்களில் கடும் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டு, கிடந்துள்ளார்.

இதனையடுத்து அவரை மீட்டு, கீரீம்ஸ்ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வட சென்னையின் பல இடங்களில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு வலுவான அடித்தளம் உள்ளது. வழக்கறிஞர் பட்டம் பெற்ற ஆம்ஸ்ட்ராங், வட சென்னை தலித் மக்கள், வழக்கறிஞர்கள் இடையே செல்வாக்கு படைத்தவர்.

2006ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார். 2007 ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக பதவி ஏற்றார்.

அவரது படுகொலை வட சென்னையின் பல பகுதிகளில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் காவல்துறையினர் ஆங்காங்கே சோதனைச் சாவடிகளை அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button