3 முக்கிய நடவடிக்கைகள்!

இதுகுறித்து ஏமன் ராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரி கூறும் போது, பாலஸ்தீன் 2 மற்றும் Dhu al-Fiqar என்ற பெயர் கொண்ட 2 பாலிஸ்டிக் மிசல்ஸ்களை டெல் அவிவை நோக்கி வீசியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதே போல் ஈழட் நகத்தை நோக்கி, ஏராளமான ஆள் இல்லா விமானங்களை அனுப்பியதாக கூறியுள்ளார்.
அதே நேரம் டெல் அவிவ் நோக்கி வந்த பாலஸ்தீன் 2 என்ற பாலிஸ்டிக் மிசல்ஸை இடைமறித்ததாகவும், இதனால் நகரத்தில் அபாய எச்சரிக்கை ஒலி ஏற்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் குறிப்பிட்டுள்ளது.அதே நேரம் இரண்டாவதாக வீசப்பட்ட, மிசல்ஸ் மற்றும் ஈழட் நகத்தை நோக்கி வீசப்பட்ட ஆள் இல்லா விமானம் குறித்து, இஸ்ரேல் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

காசாவுக்கு எதிரான தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியதற்கு பிறகு, பாலிஸ்டிக் மிசல்ஸ்கள், க்ரூஸ் மிசல்ஸ்கள் மற்றும் ஆள் இல்லா விமானங்கள் மூலம் 220 தாக்குதல்களை ஏமன் படைகள் நடத்தியுள்ளன.இந்த நிலையில் அக்டோபர் 7 தாக்குதல் நினைவு நாள் நிகழ்ச்சியின் போது, காசாவில் இருந்து ஹமாசும், லெபனானில் இருந்து ஹிஸ்புல்லாவும், ஏமனில் இருந்து ஹவுத்திப் படைகளும், ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏமன் ஹவுத்திப் படைகள் செங்கடலை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதால், கடந்த ஓராண்டில் மட்டும் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் 84 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.இதுவரை ஹவுத்திப்படைகள் இஸ்ரேல் துறைமுகங்களுக்கு செல்லும் 80 சரக்கு கப்பல்களை குறிவைத்து தாக்கியுள்ளனர். 2 கப்பல்களை மூழ்கடித்துள்ளனர். ஒரு கப்பலை சிறைபிடித்துள்ளனர்.