இந்தியா

போலே பாபாவை பார்க்கத் திரண்ட 2.50 லட்சம் பேர்! கட்டுக்கடங்காத கூட்டம்!

போலே பாபா கூட்டத்திற்கு வந்த 2 லட்சத்து 50 ஆயிரம் பேர்…
80 ஆயிரம் பேர் மட்டுமே வருவார்கள் என அனுமதி பெறப்பட்டது அம்பலம்…

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராசில் ஆன்மீக நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் பலியானோர் எண்ணிக்கை 120 ஐ தாண்டியுள்ளது. தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுமார் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் சுமார் 80 ஆயிரம் பேர் இந்த நிகழ்ச்சிக்கு வருவார்கள் என கூறி போலே பாபா கூட்டத்திற்கு அனுமதி வாங்கப்பட்ட நிலையில், சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் வந்தததாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால் கூட்டத்தை உள்ளூர் காவல்துறையினர், அரசு நிர்வாகம், ஆசிரம பக்தர்கள் என யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை என கூறப்படுகிறது.

கூட்டம் நடந்த இடத்தில் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக அவசர தேவைக்கான ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு மீட்பு பணி வாகனங்கள் போதிய அவளில் இருக்கவில்லை.
ஏற்கனவே போலே பாபா நடத்திய ஒருக் கூட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டு, பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது. ஆனால் அந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.

தற்போது, அந்த இடத்தில் 80 ஆயிரம் பேர் கூடுவார்கள் என அனுமதி வாங்கப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு கூட உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிகிறது.
குறிப்பாக உள்ளூர் மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லாததன் காரணமாகவே பலர் உயிரிழந்துள்ளனர்.

=====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button