உலகம்

இதுவரை 177 கப்பல்களுக்கு குறி – இழுத்து மூடப்பட்ட இஸ்ரேல் துறைமுகம்! பட்டியல் வெளியிட்டுள்ள ஹவுத்திக்கள்!

இதுவரை 177 கப்பல்களுக்கு குறி…
இழுத்து மூடப்பட்ட இஸ்ரேல் துறைமுகம்…
வெற்றிக் கணக்கை பட்டியலிட்டுள்ள ஹவுத்தித் தலைவர்!

காசா மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு போரை தடுக்க, ஹவுத்திப் படைகள் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு கிடைத்த வெற்றியை அந்நாட்டின் தலைவர் அப்துல் மாலிக் அல் ஹவுத்தி பட்டியலிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, “இஸ்ரேல் செல்லும் கப்பல்களை குறிவைத்து கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 16 பாலிஸ்டிக் மிசல்ஸ்களை ஹவுத்தி படைகள்.

வீசியுள்ளன 251 கோடி ரூபாய் மதிப்புள்ள அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் ஆள் இல்லா உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வகை விமானங்கள் இதுவரை 7 சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு 1750 கோடி ரூபாய் ஆகும்.

மேலும் அவர் கூறும் போது, “ தங்களது கடல் முற்றுகையால், இஸ்ரேலின் முக்கியத் துறைமுகமான ஈழட் துறைமும், திவால் நிலையை அடைந்து, இழுத்து மூடப்பட்டுள்ளது. ஈரான் தலைமையிலான ஆக்சிஸ் கூட்டணி தொடர்ந்து காசா மக்களுக்கு ஆதரவாக இருக்கும்.

ஆனால் சில அரபு மற்றும் முஸ்லீம் நாடுகள் காசா மக்களுக்கு துரோகம் விளைவித்து வருவது ஏமாற்றம் அளிக்கிறது. 57 முஸ்லீம் நாடுகளை உள்ளடக்கிய ஓ.ஐ.சி. எனப்படும் இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை கண்டனத்திற்குரியது. சாதாரண ஒரு என்.ஜி.ஓ. அமைப்பு கூட, இதை விட பலமான வார்த்தைகளில் இஸ்ரேலை கண்டித்துள்ளன.

சில அரபு நாடுகள் தொடர்ந்து இஸ்ரேலுடன் ஒத்துழைப்பில் உள்ளன. ஈரான் இஸ்ரேலை தாக்கக் கூடாது என அவர்கள் கூறி வருகின்றனர். 4 அரபு நாடுகள் மற்றும் சில முஸ்லீம் நாடுகள் இஸ்ரேலை பலமாக ஆதரித்து வருகின்றன. டொனால்டு டிரம்பிற்கு காதில் காயம் ஏற்பட்ட போது, வன்மையான கண்டனங்களை தெரிவித்த சில முஸ்லீம் நாடுகள், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டபோது, அமைதி காத்தனர். ஹமாஸ் உள்ளிட்ட போராளிக்குழுக்களை இந்த அரபு நாடுகளின் ஊடகங்கள் தீவிரவாத இயக்கமாக குறிப்பிடுகின்றன.

ஆனால் சர்வதேச நீதிமன்றத்தால் கிரிமினல் என கூறப்பட்ட சியோனிச ஆட்சியாளர்களை மரியாதையான வார்த்தைகளால் குறிப்பிடுகின்றனர். இவர்களது ஊடகங்கள் மூலம் அவர்கள் தங்களது அரசின் நிலைப்பாட்டை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆனால் காசா உலக இஸ்லாமியர்களுக்கு கல்விக் கூடமாக உள்ளது. ஒரு உண்மையான முஸ்லீம் எப்படி அநீதிகளை எதிர்த்து, உறுதியுடன் நிற்க வேண்டும் என்பதை காசா மக்களும், போராளிகளும் இந்த உலகத்திற்கு எடுத்துக்காட்டாக இருந்து வருகின்றனர். காசா மக்களை காட்டிக் கொடுத்து, அவர்களுக்கு துரோகம் செய்து, எதிரிகளுக்கு பணத்தையும், ஊடக ஆதரவையும் அளித்து வரும் துரோகிகளுக்கு கேடுதான்.

பட்டினி, பஞ்சம், நோய், காயம், உயிரிழப்பு போன்ற சொல்ல முடியாத துயரங்களை துடைத்துக் கொண்டு, இறைவன் அளித்த வாக்குறுதியை நம்பி, உறுதி, தைரியம், பொறுமையுடன் காசா போராளிகள் போரிட்டு வருகின்றன. அவர்களுக்கு தங்களால் இயன்ற அனைத்து வழிகளிலும் ஏமன் ஹைவுத்திப் படைகள் உறுதியாக துணை நிற்கும்” இவ்வாறு ஏமன் படைகளின் தலைவர் சையது மாலிக் அல் ஹவுத்தி தெரிவித்துள்ளார்.
=====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button