இந்தியாவைரல்

ஒரு மணி நேரத்தில் 17 பேர்! சம்பவம் செய்த தெருநாய்!

கூலிப்படையினர் பாணியில் சம்பவம் செய்த வெறி நாய்…
பாய்ந்து முகத்தை கடித்த பரபரப்பு காட்சிகள்…
ஒரு மணி நேரத்தில் 17 பேர் மீது தாக்குதல்…

வீட்டுக்கு வெளியே நின்று பேசிக்கொண்டிருந்த இளைஞரை நெருங்கிய வெறி நாய் ஒன்று, திடீரென தாக்கத் தொடங்கியது. கூலிப் படையினர் பாணியில் முதலில் காலில் கடித்த நாய், அந்த இளைஞர் தடுமாறிய போது, பாய்ந்து முகத்தை கடித்துக் குதறியது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர், வீட்டுக்குள் தப்பி ஓடி உயிர் பிழைத்தார்.

மனதை உலுக்கும் இந்தச் சம்பவம் நடைபெற்ற இடம் உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர். முதலமைச்சர் ஆதித்யா நாத்தின் சொந்த ஊர் ஆகும். அந்த இளைஞர் மட்டுமல்ல, அவரைத் தொடர்ந்து, ஒரு பெண், 2 சிறுமிகள் என ஒரு மணி நேரத்தில் மட்டும் 17 பேரை அந்த வெறி நாய் கடித்துக் குதறியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு சென்ற நிலையில், அங்கு ரேபிஸ் தடுப்பூசிகள் தீர்ந்து விட்டதாக கூறியுள்ளனர்.

வளர்ப்பு நாய்களுக்கு அதிக அளவில் ரேபிஸ் தடுப்பூசி போடப்படுவதால், தெரு நாய் கடித்து பாதிக்கப்படுபவர்களுக்கு தடுப்பூசி கிடைப்பதில்லை. மேலும் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, கருத்தடை சிகிச்சை அளிப்பதிலும் சுணக்கம் உள்ளதாக கோரக்பூர்வாசிகள் புகார் எழுப்பியுள்ளனர்.

ஒருப் பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல, வெறிநாய் தாக்க வந்தால், மிகவும் கவனமாக அவற்றை எதிர்கொள்ள வேண்டிய அவசியத்தை இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது. உருவத்தில் சிறியதாக உள்ளதால், அலட்சியமாக நாய்களை அடக்க முயன்றால், இதுபோன்ற கடும் எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை இந்த காட்சிகள் வெளிப்படுத்தியுள்ளன.


=====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button