உலகம்

ரூ.1339 லட்சம் கோடி சொத்து – ஒட்டுமொத்த உலக பணக்காரர்களின் சொத்துக்களை கூட்டினாலும், இவரை தோற்கடிக்க முடியாது!

உலகப் பணக்காரர்களின் ஒட்டுமொத்த பணத்தையும் சேர்த்தாலும் இவரை தோற்றகடிக்க முடியாது…
சீன பேரரசி வூ செட்டியானின் ரூ. 1339 லட்சம் கோடி சொத்து மதிப்பு…

அம்பானி குடும்பத்தினருடைய ஆடம்ரப திருமணத்தை தொடர்ந்து, இந்த உலகத்திலேயே மிகப்பெரிய பணக்காரர் யார் என்ற கேள்வி எழுந்தது. தற்போதைய உலகப் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் இருப்பவர் எலான் மஸ்க். டுவிட்டர், டெஸ்லா, எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களின் தலைவர்.

இவருடைய சொத்து மதிப்பு சுமார் 18 லட்சம் கோடி ரூபாய். நம் அம்பானியின் சொத்து மதிப்பு இதில் பாதி மட்டுமே.
இந்த சூழலில் எலான் மஸ்கை விட பெரிய பணக்காரர் இந்த உலகத்தில் இருந்திருக்கிறாரா என்ற கேள்வி எழுந்த போது, அதற்கு விடையாக வந்தவர் தான் சீன பேரரசி வூ செட்டியான். இவரது இப்போது உயிருடன் வாழ்ந்து கொண்டிருப்பவர் அல்ல. சுமார் 1500 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர்.

Today in History: Abdication of Empress Wu Zetian

பிரபல சீன வியாபாரியின் மகளாக இருந்து, சீன மன்னர் லீ யுவானின் அரசவைக்குள், செயலாளராக நுழைந்த இவர், மன்னரை கைக்குள் கொண்டு வந்துள்ளார். இவரது அழகு, பேச்சு, அரசியல் அறிவு, நிர்வாகத் திறன் கண்டு வியந்த மன்னர், இவருக்கு முழுமையாக அடிமையாகியுள்ளார். ஆனால் அந்த மன்னர் லீ யுவான் விரைவிலேயே காலமானார்.
அவரது மகன் டாங் வம்சத்தின் காசோங் புதிய மன்னராக தேர்வு செய்யப்பட்டார்.

ஒரு மன்னர் மறைந்தால், அவருடன் பணியாற்றிய பெண்கள் அனைவரும் புத்த மடாலயத்தில் சேர வேண்டும் என்பது அப்போது இருந்த விதி. இதனை தகர்த்து, புதிய மன்னர் காசோங்கின் அதாவது, இறந்த மன்னரின் மகனின் அரசவைக்குள் மீண்டும் நுழைந்து, மன்னரின் ஆசை நாயகியாக உருவெடுத்துள்ளார்.

பிறகு மீண்டும் அரசியலை தனது கைக்குள் கொண்டு வந்த இவர், ஒரு கட்டத்தில் மன்னர் காசோங் உயிரிழக்க, முழு அதிகாரத்தையும் தன் பக்கம் கொண்டு வந்த விட்டார். அதிகாரத்திற்கு போட்டியாக வந்த, காசோங்கின் மனைவிகள், மகள், மகன் ஆகியோரை கொடூரமாக வேட்டையாடியுள்ளார்.

Was China's Empress Wu the richest woman ever? Played by Fan Bingbing in Empress of China, she would have had US$16 trillion today – much more than L'Oréal heiress Françoise Bettencourt Meyers |

இவரை எதிர்த்தவர்கள், அரசவையை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர், பலர் அடையாயம் தெரியாமல் அழிக்கப்பட்டுள்ளனர். பின்னர் இவரது கைக்கு அதிகாரம் மொத்தமாக வந்த நிலையில், சுமார் 15 ஆண்டுகள் சீனாவை சுதந்திரமாக ஆட்சி செய்துள்ளார்.

இவரது ஆட்சியில் பட்டுச் சாலை மீண்டும் செயல்படத் தொடங்கியது. வருமானம் கொழித்துள்ளது. வளத்தை குவிக்கத் தொடங்கியுள்ளார். வரலாற்று ஆசிரியர்கள் கருத்துப்படி, இன்றைய மதிப்பில் இவரது சொத்து மதிப்பு 16 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். தற்போது ஒட்டுமொத்த இந்திய நாட்டின் பொருளாதார மதிப்பே 3.7 டிரில்லியன் டாலர்கள் தான்.

உலகின் முதல் பணக்காரர் எலான் மஸ்க் முதல் 10வது இடத்தில் இருக்கும் வாரன் பப்பட் வரை மொத்தமாக சேர்த்தால் கூட, சீன பேரரசியின் சொத்து மதிப்பில் கால் பகுதி கூட வராது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தான் சொல்கிறார்கள் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்று.

====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button