12ஆம் வகுப்பு வெற்றியை கொண்ட, ரூ. 60 ஆயிரம் செலவில் மது விருந்து, குடிபோதையில் 2.5 கோடி காரை ஏற்றி 2 பேர் பலி!

பப் விடுதிகளில் குடித்து விட்டு, அதிவேகமாக கார் ஓட்டிய பணக்கார சிறுவன்…2 அப்பாவிகள் மீது காரை ஏற்றிக் கொலை…இரண்டை கோடி ரூபாய் மதிப்புள்ள காரை சல்லி சல்லியாக நொறுக்கிய மக்கள்…15 நிமிடத்தில் பிணையில் வெளியே வந்த பணக்கார சிறுவன்… நடந்தது என்ன? புனே நகரத்தில் நடந்த இந்தச் சம்பவம் கடந்த ஒரு வாரமாக அந்நகர மக்களை பெரும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.
2 பப் விடுதிகளில் வயிறுமுட்ட குடித்து விட்டு, சிறுவன் ஒருவன் லைசன்ஸ் கூட இல்லாமல், போர்ச் எனப்படும் விலை உயர்ந்த சொகுசுக் காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். நிதானம் இன்றி சென்று, இரு சக்கர வாகனத்தில் பயணித்த இரண்டு பொறியாளர்கள் மீது காரை கொண்டு இடித்துள்ளார்.இதில் அந்த இருவரும் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். அப்பகுதியில் இருந்த மக்கள், அந்த காரை மடக்கிப் பிடித்த போது, காதை பிளக்கும் வகையில், ஆங்கில பாப் பாடல்களை இசைத்துக் கொண்டிருந்திருந்துள்ளது.குடிபோதையில் நிதானம் இன்றி இருந்த சிறுவனை அங்கிருந்து வெளியே இழுத்துப் போட்டுள்ளனர். சிலர் காரையும் சரமாரியாக அடித்து நொறுக்கினர். இந்த வீடியோ சமூக வலைளங்களில் வைரலானது.
இதற்கு பிறகு போலீசார் அந்த சிறுவனை, மக்களிடம் இருந்து காப்பாற்றி அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். அப்போது, அந்த சிறுவன் புனேயைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் விஷால் அகர்வால் என்பவரின் மகன் எனத் தெரிந்தது. அகர்வால் குடும்பம் பாரம்பரியமாக ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறக்கும் பணக்கார குடும்பமாகும். இந்த நிலையில், சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்த சிறுவனுக்கு உடனடியாக ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இனி மேல் இதுபோன்ற தவறைச் செய்ய மாட்டேன் என 300 வார்த்தைகளில் கட்டுரை ஒன்றை எழுதுமாறு வினோத தண்டனை வழங்கப்பட்டு, சிறுவன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான்.
இந்த செய்த பொதுமக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பணத் திமிரில் 2 அப்பாவிகளின் உயிரை பறித்தவனுக்கு இது தான் தண்டனையா, இவன் இதுபோன்று ஊதாரித்தனமாக ஊர் சுற்றுவதற்கு அனுமதித்த அவனது பெற்றோருக்கு என்ன தண்டனை போன்ற கேள்விகள் எழுந்து கடும் அதிருப்தி எழுந்தது. இதனையடுத்து விழித்துக் கொண்ட காவல்துறை, இந்த வழக்கை மீண்டும் கையில் எடுத்து, சிறுவன், அவனது தந்தை, அவனது ஓட்டுநர், பப் விடுதிகளின் உரிமையாளர்கள் என 5 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, அனைவரையும் கைது செய்தது.தற்போது, அந்தச் சிறுவன் காப்பகத்தில் அடைக்கப்பட்டான். அவன் ஓட்டிவந்த காரின் மதிப்பு 2.5 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது. காருக்கு நம்பர் பிளேட் இல்லை. மேலும் தற்போதைய புதிய செய்தியாக அந்த சிறுவன் விபத்தை ஏற்படுத்துவதற்கு முன்பு, 2 பப் விடுதிகளுக்கு 69 ஆயிரம் கட்டணம் செலுத்தியுள்ளான். இந்த பணம் அவனும், அவனது நண்பர்களும் குடிப்பதற்காக செலவிடப்பட்டுள்ளது.
12 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அதில் தேர்ச்சி பெற்றதை கொண்டாடுவதற்காக, தனது நண்பர்களுடன பப் விடுதிக்கு சென்று, தற்போது, 2 பேரின் உயிரை பறித்துள்ளான் பணக்காரச் சிறுவன். அவனுக்கு குடிப்பதற்கு, பணமும், விலை உயர்ந்த காரையும் கொடுத்து அனுப்பியுள்ளனர் அவனது பெற்றோர். இவர்களுக்கு வழங்கும் தண்டனை இதுபோன்று பணத் திமிரில் ஆட்டம் போடும் பிற பணக்காரர்களுக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும் என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்…