காசாவில் நாள் ஒன்றுக்கு 100 குழந்தைகள் பலி – ஐ.நா. மன்றம் பரபரப்புத் தகவல்!

காசாவில் தாய் தந்தையரை இழந்து, அநாதையான குழந்தைகளின் எண்ணிக்கை 17,000….
ஐ.நா. குழந்தைகள் அமைப்பு பரபரப்புத் தகவல்…
நாள் ஒன்றுக்கு 100 குழந்தைகள் கொல்லப்படுவதாகவும் வேதனை…
காசாவில் நாள் ஒன்றுக்கு 100 குழந்தைகள் கொல்லப்படுவதாகவும், அல்லது காயம் அடைவதாகவும் யூனிசெஃப் (UNICEF) எனப்படும் குழந்தைகள் பாதுகாப்புக்கான ஐ.நா. நிறுவனம் தெரிவித்துள்ளது.
உடனடியாக போரை நிறுத்தாவிட்டால், ஒவ்வொரு நாளும் இந்த துயரங்கள் தொடரும் என ஐ.நா. கூறியுள்ளது. கடந்த 8 மாதங்களில் மட்டும் சுமார் 17,000 குழந்தைகள், தாய், தந்தையர்களை இழந்து, ஆதரவற்றவர்களாக மாறியுள்ளனர்.
சுமார் 21 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போய் உள்ளனவர். இவர்கள் பெரும்பாலும், இடிபாடுகளில் சிக்கி அவர்களின் உடல்கள் மீட்கப்படாமல் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசாவில் இதுவரை சுமார் 38 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது, உடல்கள் கண்டெடுக்கப்பட்டவர்கள் மட்டுமே. பல்லாயிரக்கணக்கானவர்களின் உடல்கள் இன்னும் இடிபாடுகளில் இருந்து, மீட்கப்படாத நிலையில் உள்ளன.
உணவுப்பொருட்கள் சப்ளை நிறுத்தப்பட்டதால், சுமார் 50 ஆயிரம் குழந்தைகள், ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக The United Nations Relief and Works Agency அமைப்புத் தெரிவித்துள்ளது.
மேலும் குழந்தைகளை மனிதத் கேடயங்களாகவும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் பயன்படுத்திய தகவலும் வெளியாகியுள்ளது. குழந்தைகளின் முதுகில் துப்பாக்கியை வைத்து, அவர்களை முன்னே செல்ல கூறி, அதற்கு பிறகு இஸ்ரேல் படைகள் சென்று சோதனைகளை நடத்துவதாகவும், இதன் மூலம் பாலஸ்தீன் போராளிக்குழுக்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முயற்சித்ததாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
=====