காசாவில் ஒரேத் தாக்குதலில் இஸ்ரேல் படையினர் 10 பேர் பலி!

ஹமாஸ் படையினரின் நூதன திட்டம்…
கட்டிடம் இடிந்து விழுந்து 10 இஸ்ரேல் படையினர் பலி…
273வது நாளாக காசா மீது இஸ்ரேல் கொடூரத் தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. இதில் பெரும்பாலும் அப்பாவி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்களே பலியாகி வருகின்றனர். ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கிறோம் என்ற பெயரில் அப்பாவி காசா மக்களை காவு வாங்கி வருகிறது, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை. அதே நேரம் ஹமாஸ் உள்ளிட்ட பாலஸ்தீன போராளிக் குழுக்கள் தினமும் இஸ்ரேல் படையினரை துவம்சம் செய்து வருகிறது.
இந்த நிலையில், காசா சிட்டியின் அல் நசாஸ் தெரு பகுதியில் ஹமாஸ் அமைப்பு விரித்த வலையில் இஸ்ரேல் படையினர் வசமாக சிக்கிக் கொண்டனர். அங்கு சண்டை நடைபெற்ற போது, ஒரு கட்டிடத்திற்குள் இருந்து தாக்குதல் நடத்திய ஹமாஸ் படையினர், பின்னர் உடனடியாக அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
அந்த கட்டிடத்தை இஸ்ரேல் படை கைப்பற்றி, உள்ளே நுழைந்த போது,அங்கு ஹமாஸ் ஏற்கனவே தயார் நிலையில் வைத்திருந்த, குண்டுகள் வெடித்து, கட்டிடம் சரிந்து விழுந்துள்ளது. இதில் ஏராளமான இஸ்ரேல் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர். அவர்களை மீட்க இஸ்ரேல் ராணுவ ஹெலிக்காப்டர் வந்துள்ளது.
பிறகு அவர்களை நோக்கியும் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் இஸ்ரேலின் மெர்காவா டாங்கி ஒன்றும் தகர்க்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களில் சுமார் 10 இஸ்ரேல் படையினர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாசின் ராணுவ பிரிவான அல் கஸ்ஸாம் படைப்பிரிவு தனது டெலிகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்தச் செய்தியை அல் ஜசீரா வெளியிட்டுள்ளது.
=====