
காஷ்மீரின் பகல்காமில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 10 நாட்கள் ஆகியும் இன்னும் பிடிபடவில்லை. இதுகுறித்த தகவல்களை என்ஐஏ அதிகாரிகள் வெளியிட்டுள்ளதாக என்டிடிவி செய்தி தெரிவித்துள்ளது.
பகல்காமில் நுழைந்த 4 தீவிரவாதிகள், 26 நிராயுதபாணிகளை வேட்டையாடி விட்டு, தப்பிச் சென்றுள்ளனர். அவர்களை ராணுவமும், போலீசும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அவர்கள் அடர்ந்த வனப்பகுதியில் பதுங்கி இருக்கலாம் என்றும், பல நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை எடுத்து வந்திருக்கலாம் என்றும், உடல் சக்தியை தக்க வைக்கும் வகையிலான மாத்திரைகள் போன்றவற்றை எடுத்து வந்திருக்கலாம் என என்ஐஏ தகவல்கள் தெரிவிப்பதாக என்டிடிவி செய்து கூறுகிறது.
இதன்காரணமாகவே அவர்கள் இப்போது வரை பிடிபடாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
தாக்குதல் நடத்தப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக தீவிரவாதிகள், பகல்காம் அருகே உள்ள அழகிய புல்வெளி பகுதியான பைரசன் பள்ளத்தாக்கில் இருந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அரு, பேத்தாப் உள்ளிட்ட மொத்தம் 4 இடங்களில் அவர்கள் இருந்துள்ளதை விசாரணை முடிவுகள் உறுதிபடுத்தியுள்ளன.
ஆனால் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலமாக இருந்த நிலையில், அவர்கள் பகல்காமின் Baisaran Valley-யை தேர்வு செய்துள்ளனர்.
தீவிரவாதிகள் அதிநவீன தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி இருப்பதாக இந்திய ராணுவ மேஜர் ஜெனரல் யாஷ் மோர் என்டிடிவியிடம் கூறியுள்ளார்.
சிம்கார்டுகள் இல்லாத, குறுகிய தூரம் தகவல் தொடர்பு மேற்கொள்ளும் உபகரணங்களை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். இதனை இடைமறிப்பது கடினம். அவர்கள் 3 சேட்டிலைட் போன்களை பயன்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
அவர்களது திட்டம் எளிமையாக இருந்துள்ளது. மொத்தம் 4 பேர் இதில் ஈடுபட்டுள்ளனர். 3 பேர் அப்பாவி சுற்றுலா பயணிகளை நோக்கி, சரமரியாக துப்பாக்கிச் சூடு நடத்தும் போது, ஒருவர் மறைந்து கொண்டு, அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்துள்ளார்.
கொல்லப்பட்ட 26 பேரில் ஒருவர் நேபாள் நாட்டைச் சேர்ந்தவர். ஒரு கடற்படை அதிகாரி, திருமணம் முடிந்து ஒரு வாரமே ஆன நிலையில், ஹனிமூன் வந்தவர்.
இரு நாடுகள் இடையே கடும் பதற்றம் நிலவும் நிலையில், எப்போது வேண்டுமானலும் பெரும் மோதல் வெடிக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது.