ஓரு காலத்தில் அம்பானி, அதானியை விட கோடீஸ்வரர்! இப்போது தெருக்கோடியில்..!

Raymond பிராண்ட்டை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்த நிறுவனத்தின் சேர்மன் தான் விஜய்பாத் சிங்கானியா. இவர் தொடாத உயரமே கிடையாது. இவர் பார்க்காத பணம் கிடையாது. இவரைத் தெரியாத பிரதமர்கள், முதலமைச்சர்கள் கிடையாது. அம்பானி, அதானிக்கெல்லாம் சீனியர்.ஒருக் கட்டத்தில் அம்பானி குடும்பம், அதானி குழுமம், டாடா, பிர்லா ஆகியோரின் நிறுவனங்களை விட ராய்மென்ட் குழுமத்தின் மதிப்பு அதிகமாக இருந்தது.
வானத்தில் பறப்பது தான் விஜய் சிங்கானியாவின் பொழுது போக்கு. தனி விமானத்தில் 5000 மணி நேரம் தொடர்ந்து பறந்து ஒரு உலக சாதனை படைத்தார். இதே போல், Hot air balloon இல் 69 ஆயிரத்து 852 அடி உயரம் பறந்து புதிய உலக சாதனை படைத்தார். இதனால் இந்திய விமானப் படையில் இவருக்கு கவுரவ அதிகாரி பதவி வழங்கப்பட்டது. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களால் பத்மபூசன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
மும்பையில் தற்போது, அம்பானி குடும்பத்தினர் வசிக்கும் ஆன்டிலியா இல்லத்திற்கு அடுத்து, சுமார் 6000 கோடியில் பிரமாண்ட மாளிகையை கட்டினார். இன்றும் அம்பானி குடும்ப வீட்டிற்கு அடுத்ததாக மதிப்பு மிக்கதாக இருப்பது சிங்கானியாவின் மாளிகை தான்.இந்நிலையில், இவர் செய்த ஒரு காரியம் இவரது வாழ்க்கையே புரட்டிப் போட்டது. அது வேறு ஒன்றும் அல்ல. தனது சொத்துக்களை இரண்டாக பிரித்து, தனது இரண்டு மகன்களுக்கு வழங்கினார். ஆனால் இவரது மூத்த மகன் மதுபதி சிங்கானியா தனது சொத்துக்களை தனியாக பிரித்து, தருமாறு கூறிவிட்டு சிங்கப்பூருக்கு சென்றார். அவரது சகோதரர் கவுதம் சிங்கானியா குடும்பத் தொழிலை கவனித்து வந்தார்.
தனது பெயரில் இருந்த பங்குகள் அனைத்தையும், தனது மகன் கவுதமிற்கு எழுதிக் கொடுத்தார் விஜய்பாத் சிங்கானியா.
இந்நிலையில், இளைய மகன் கவுதமிற்கும், தந்தை விஜய்பாத்திற்கும் மோதல் உருவானது. தனது அப்பா எவ்வளவு பெரிய மனிதர் என்பதை கூட, கருத்தில் கொள்ளாமல், அப்பாவை அவர் கட்டிய மாளிகையில் இருந்து வெளியேற்றினார் மகன்.
இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது.இதுகுறித்து உருக்கமாக ஊடகங்களிடம் பேசிய விஜய்பாத் சிங்கானியா, நான் கட்டிய மாளிகையில் ஒரே ஒரு அறையை ஒதுக்குமாறு மகனிடம் கேட்டேன், அங்கு அமர்ந்து ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்பது தான் என் கனவு, அதைக் கூட அவர் ஏற்றுக் கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது, மும்பையில் ஒரு வாடகை இல்லத்தில் விஜய்பாத் சிங்கானியா வசித்து வருகிறார்.