உலகம்
ஈரான் – இஸ்ரேல் இடையிலான 12 நாட்கள் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தன்னிச்சையாக அறிவித்துள்ளார்.

முதல் 12 மணி நேரம் ஈரான் எந்த தாக்குதலையும் நடத்தக் கூடாது என்றும், அடுத்த 12 மணி நேரம் இஸ்ரேல் தாக்குதல் நடத்தக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, 2ஆம் கட்ட போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என அவர் கூறியுள்ளார்.
எனினும் இந்த போர்நிறுத்தம் பற்றிய ஒப்பந்தங்கள் தங்களுக்கு வழங்கப்படவில்லை என கூறிய ஈரான், இஸ்ரேலின் தாக்குதல் நிறுத்தப்பட்டால் மட்டுமே தங்களது தாக்குதல்களும் நிறுத்தப்படும் என அறிவித்தது.
டிரம்பின் போர் நிறுத்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே, தெற்கு மற்றும் மத்திய இஸ்ரேல் மீது ஈரான் பாலிஸ்டிக்ஸ் மிசல்ஸ்களை வீசியதால், அபாய எச்சரிக்கை ஒலி எழுந்தது.
ஜெருசலம் மற்றும் பீர்சபாவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக முதல் கட்டத் தகவல்கள் வெளியானது.