பணம், செல்வாக்கு இருந்தாலும் கூட, பத்திரிக்கையாளர்களை தொடுவதற்கு நடிகர்கள் பயப்படுவது ஏன் – லட்சுமி காந்தன் வழக்கு ஒரு பார்வை!

இந்த நடிகருக்கும், அந்த நடிகைக்கும் தொடர்பு, அந்த நடிகை அந்த ஹோட்டல்ல அவரு கூட இருந்தாங்க.. இப்படி இன்னைக்கும் கூட சிலர்… பத்திரிக்கையாளர் என்கிற போர்வையில, ஆதாரம் இல்லாத தகவல்களை அள்ளி வீசிட்டு வாராங்க… ஆனா பெரிய பெரிய நடிகர்களால கூட இவங்கள எதுவும் செய்ய முடியல. இதுக்கெல்லாம் காரணம் என்னனு தெரியுமா?அது தான் லட்சுமி காந்தன் கொலை வழக்கு… லட்சுமி காந்தன் என்பவர் 1940களில் ஒரு சினிமா பத்திரிக்கையாளராக இருந்தவரு. அப்போ இருந்த சூப்பர் ஸ்டார்களான தியாகராஜ பாகவாதர், என்எஸ் கிருஷ்ணன் போன்ற நடிகர்கள பத்தி, இஷ்டத்துக்கும் கதை அளந்து விடுவாரு. அவங்களுக்கு பல பெண்களோட தொடர்பு இருப்பதாகவும், பல தவறுகள செய்வதாகவும் எழுதிட்டு வந்தாரு.
தியாகராஜ பாகவாதருடைய சாதி பற்றியெல்லாம் கூட விமர்சிச்சு எழுதிட்டு வந்தாரு.இந்த நிலையில அவர் ஒரு கும்பலால லட்சுமி காந்தன் கொலை செய்யப்பட்டாரு.இந்த வழக்கில யாரும் எதிர்பார்க்காத வகையில தியாகராஜபாவாதர், என்எஸ் கிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டாங்க…இந்த சம்பவத்தோட தியாகராஜ பாகவாதரோட அத்தியாயமே முடிஞ்சதுன்னு சொல்லலாம்.தென் இந்திய அளவுல பெயரி ஸ்டார இருந்த, பாகவாதர் ஒரு பத்திரிக்கையாளர் கொலை வழக்குல ஒன்னும் இல்லாம போய்ட்டாரு.இந்த வழக்குல பாகவாதருக்கு ஆஜரான வழக்கறிஞர் முன்ஷி. இவர் மத்திய அமைச்சராகவும் இருந்தாரு. இவரது ஒரு நாள் பீஸ் எவ்வளவு தெரியுமா. 75 ஆயிரம் ரூவா.
அப்போ, ஒரு பவுன் தங்கத்தோட விலை என்ன தெரியுமா வெறும் 80 ரூபா தான்.இதுமட்டும் இல்லாம பாவாதர் வழக்குல அவர வெளிய எடுத்தது வழக்கறிஞர் எத்திராஜ்.அப்போ இந்தியாவுடைய சுப்ரீம் கோர்டு லண்டன்ல தான் இருந்தது. அதுக்கு பேரு பிரிவி(privy) கவுன்சில்.அங்க போய்த்தான் பாகவாதருக்கு எத்திராஜ் விடுதலை வாங்கி கொடுத்தாரு.
ஒரு குற்றவாளி முன்னுக்கு பின் முரணா பல முறை மாத்தி மாத்தி வாக்குமூலம் கொடுத்தததால, அந்த வழக்கில இருந்து பாகவாதர், என்எஸ் கிருஷ்ணன் விடுதலை ஆனாங்க…இவருக்கும் பாகவாதர் பெரிய தொகைய பீஸா கொடுத்தாரு. அதை வச்சு தான் எத்திராஜ் சென்னைல பிரபல எத்திராஜ் பெண்கள் கல்லூரிய கட்டினாரு.
இந்த வழக்கு முடிஞ்சு வெளிய வற்றதுக்குள்ள தனது பல லட்சம் ரூபா சொத்துக்கள வித்திட்டாரு தியாகராஜ பாகவாதர். அவரது கடைசி காலம் ரொம்ப சோகமா முடிஞ்சது…இதனால எவ்வளவு தான் உச்சத்துல இருந்தாலும், தன்னைப்பத்தி தப்பா எழுதிற பத்திரிக்கை காரங்கள நடிகர்கள் கண்டுக்கிறதே இல்ல.முடிஞ்சா… கொடுக்கிறது கொடுத்து, ஃப்ரண்ட் ஆகிடுவாங்க. முடிலைனா ஒதுங்கி வந்திருவாங்க…இந்த சம்பவம் தான் பத்திரிக்கையாளர்களை கண்டு சினிமா பிரபலங்கள் பயப்படுவதற்கான முக்கியமான காரணமா இருக்கு…